"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

Friday, December 29, 2017

வைஷாலி வாசகர் வட்ட 46வது சந்திப்பு, 24-12-2017 (Dec to Jan)-மார்கழி மாதம்:- சங்கீதமும் இங்கீதமும் பழகுவோம்.

வைஷாலி வாசகர் வட்ட 46வது சந்திப்பு, 24-12-2017 (Dec to Jan)-மார்கழி மாதம்:- சங்கீதமும் இங்கீதமும் பழகுவோம்.... பஜனை பாடல்கள் பாடி அசத்துவோம் வாருங்கள்..... (தாள வாத்தியங்களும், வாய்ப்பாட்டும்) 


சங்கீதமும் இங்கீதமும் பழகுவோம் மார்கழி மாதக் கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும்":- 


வருகை தாருங்கள், தமிழில் சிறுவர்கள் தொகுத்து வழங்கும் வலைப்பதிவர்களின் மாத இதழ், ஒவ்வொரு மாதமும் ஆங்கில மாதத்தின் 3-வது ஞாயிறுதோறும் (தமிழ் மாதத்தின் முதல் ஞாயிறு அன்று) இரவு 9 மணியளவில் வெளியாகும் சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ்.   http://gulkanthu.blogspot.in/


 

கற்க கசடற….!!                                       !வாய்மையே வெல்லும்!!

 “வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்
160/Sector-4, Vaishali, Ghaziabad, NCR-New Delhi.-201012
e-mail:  vaishalireaderscircle@gmail.com
___________________________________________________________________
சுட்டீஸ் இதழ்=21 மார்கழி மாதம்-தேதி 24-12-2017வணக்கம், தாங்களின் வருகைக்கு நன்றி, இந்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழில்" -மார்கழி மாத வலைப்பதிவு:- இந்த இதழின் ஆசிரியராக, தொகுத்து வழங்குபவர்:- (Editor of the Page) வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் குழுவினர்கள் இடம்செக்டர்-4, மையப்பூங்கா, வைைஷாலி மெட்ரோ இரயில் நிலையகில்லி.

46-வது வாசகர் வட்ட சந்திப்பு, "சுட்டீஸ் குல்கந்து" இதழ்=21 மார்கழி மாதம், தேதி-24-12-2017. மூன்றாவது ஞாயிறு அன்று...இந்த மார்கழி மாதம் முழுவதும் :- வழக்கமாக இந்தமாதமும் விழிப்புணர்வு பயிற்சிமாதமாக சங்கீதமும் இங்கீதமும் பழகுவோம் மார்கழி மாதக் கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும்":-"சிறப்பு பயிற்சி பட்டறை" வைஷாலி வாசகர் வட்டத்தினர்களும் சுட்டீஸ் குழுவினர்களும் சேர்ந்து அவர்களுக்கு தெரிந்த விவரங்களை ஒன்று திரட்டி "சுட்டீஸ் குகலந்து" -21-வது இதழை உருவாக்கியிருக்கிறார்கள். சங்கீதமும் இங்கீதமும் பழகுவோம் என்று சுட்டீஸ் சிறுவர்களின் மகிழ்ச்சி கொண்டாட்டங்களோடு பஜனை பாடல்கள் பாடுவது என்கிற பயிற்சி வகுப்புகள்... சிறப்பாக நடந்தேறியது பயிற்சி பற்றிய விவரங்கள் அடுத்த பதிவில் காணலாம்.


அடுத்து வரும் சனவரி -2018, 14-01-2018 தை - மாத வலைப்பதிவு இதழின் ஆசிரியராக, (Editor of the page) இந்த வலைப்பக்கத்தை தொகுத்து வழங்க ஆவலுடன் காத்திருப்பவர் யார்? விருப்பம் உள்ளவர்  உங்கள் விருப்பத்தை உடனே தெரியப்படுத்துங்கள். மின் அஞ்சல் "vaishalireaderscircle@gmail.com"

சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ் -21  மார்கழி மாதம், 24-12-2017, ஆங்கிலமாதத்தின் 3வது ஞாயிறு அன்றய வைஷாலி வாசகர் வட்டத்தின் 46வது வாசகர் வட்ட சந்திப்பு மற்றும் விழிப்புணர்வு பயிற்சி மாதக் கொண்டாட்டங்களும். நிகழ்ச்சிகளும்.....

வைஷாலி வாசகர் வட்டத்தின் 46வது வாசகர் வட்ட சந்திப்பு 24-12-2017  

 "சங்கீதமும் இங்கீதமும் பழகுவோம்.... பஜனை பாடல்கள் பாடி அசத்துவோம் வாருங்கள்..... (தாள வாத்தியங்களும், வாய்ப்பாட்டும்) சிறப்பு பயிற்சி பட்டறை"...


வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 

முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, 

தொடர்ந்து எங்க வீட்டு "நூலகம் " 

படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் 

(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம் / செல்லப் பிராணிகள் வளர்ப்போம் )


==============

தொடர்ந்து ......

"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" சங்கீதமும் இங்கீதமும் பழகுவோம்.... பஜனை பாடல்கள் பாடி அசத்துவோம் வாருங்கள்..... (தாள வாத்தியங்களும், வாய்ப்பாட்டும்)"சிறப்பு பயிற்சி பட்டறை"என்ற பயிற்சி மாதக் கொண்டாட்டங்களும். நிகழ்ச்சிகளும்.போட்டிகளும் பரிசுகளும்.. என நடந்தேறிய அன்றய நிகழ்ச்சியில் உதவிய அனைவரையும் பாராட்டி, நிகழ்ச்சி இனிதாக நிறைவுபெற்றது.

===========================================================

சித்திரமும் கைப்பழக்கம் பகுதியில்:-

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்  நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்கொடையும் பிறவிக் குணம். – வெண்பா 7


விளக்கம்:
பழகப்பழக பழக்கம் வந்துவிடும். ஆனால் பிறவிக்குணத்தை மாற்ற முடியாது. வரைய வரையச் சித்திரமும் கைப்பழக்கம் ஆகிவிடும். பேசப் பேசச் செந்தமிழும் பழக்கமாகிவிடும். திரும்பத் திரும்ப நினைத்தால் கற்றது மனத்தில் பதிந்துவிடும். நல்லொழுக்கத்தைத் திரும்பத் திரும்பக் கடைப்பிடித்தால் அதுவும் பழக்கமாகிவிடும். ஆனால், நல்லவர் நட்பு, இரக்கக் குணம், கொடைப் பண்பு ஆகியவை பிறவியிலேயே பதிந்திருந்தால்தான் வரும்.

@சுட்டீஸ் தக்ஷின் சிவா LKG- வைஷாலி 


@சுட்டீஸ்  M.Tejaswini Class-2,CRPF School.


@சுட்டீஸ் கிருத்திகா ராஜேந்திரன் 
@ சுட்டீஸ் கதைகள்:-
"வாழ்க்கைப் பஜனைக்கு" ...தலையாவது ஆட்டு..
வாழும் சமூகத்தின்,
வாழ்க்கைப்பாட்டை,
வாழ்த்திப்பாடு.
பாடமுடியாவிட்டால் 
சேர்ந்து தலையாவது ஆட்டு
அதுவும் முடியாதுபோனால் 
அமைதியாக இருந்துவிடு....  
...கோகி....

==========================================

@விளம்பரம்:- "இந்தப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்கள்":-  

@விளம்பரம்:- "இந்தப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்கள்":-  

====================================
"மனோன்மணீயம்" நமக்களித்த "தமிழ் தாய் வாழ்த்து":-
"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்,

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்,

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற,

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் 
தமிழணங்கே!  தமிழணங்கே! .....

உன் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து 
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!"

இந்த வாழ்த்துப்பாடலை இயற்றியவர் திரு.பெ. சுந்தரம் பிள்ளை (அவர் வாழ்ந்த காலம் "ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897") 

அவர் எழுதிய "மனோன்மணீயம்" என்ற புகழ்பெற்ற நாடக நூலில் இடம்பெற்றிருக்கும் தமிழ் தாய் வாழ்த்துப்பாடல் இது. 

இந்த மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த என்று ஆரம்பமாகும் பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலின் கருத்து:- 
அலை கடலே ஆடையான இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு, பாரத நாடே முகமாம், தென்திசை அதன் நெற்றியாம், அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம், அந்தத் திலகத்தின் வாசனைப் போல்அனைத்து உலகமும் இன்பம் காண எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும் தெய்வமகள் ஆகிய தமிழே, என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய இந்த அழகைக் கண்டு வியந்து, செய்யும் செயலையும் மறந்து, வாழ்த்துகிறோம்! வாழ்த்துகிறோம்! வாழ்த்துகிறோம்!.....
நன்றிகளுடன் "வைஷாலி வாசகர் வட்டம்". 
==========================
24-12-2017 அன்றய நமது 46-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில்:- ,
"ஒவ்வொரு மதமும் ஒரு விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை வகுப்புகள். என இந்த வருடம் முழுவதும் கற்றுக்கொள்வோம், தெரிந்துகொள்வோம் பயிற்சிப் பட்டறை மாதங்களின் வருடமாக, நமது வைஷாலி வாசகர் வட்டத்தின், ஒவ்வொரு மாதமும், ஆங்கில மதத்தின் 3வது ஞாயிறு அன்றைய வாசகர் வட்ட சந்திப்பில், ஒவ்வொரு மதமும் ஒரு விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை வகுப்புகள்... பயிற்சி மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும், மற்றும் கதைகள், கட்டுரைகள், பயிற்சிப்பட்டறை சார்ந்த போட்டிகளும் பரிசுகளும்  என இந்தமாத இதழில் பல விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.   
சங்கீதமும் இங்கீதமும் பழகுவோம்.... பஜனை பாடல்கள் பாடி அசத்துவோம் வாருங்கள்..... (தாள வாத்தியங்களும், வாய்ப்பாட்டும்) ” 
பஜனைக்கு சங்கீதம் தெரிந்திருக்கவேண்டும் அதோடு பாட்டுப்பாட சங்கீதம் தெரியாவிட்டாலும் பாடுபவர்களோடு சேர்ந்து பாடும் இங்கீதமாவது தெரிந்திருக்கவேண்டும் என்பன போன்ற பல ஆச்சரிய தகவல்களை நமக்கு வாரி வழங்கும் குட்டி பயிற்சிப்பட்டறை. மேலும் இந்த மாத சுட்டீஸ்களின் ஏராளமான செய்திகளை மிகவும் பயனுள்ள வகையில் நமது வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் "குல்கந்து" குழுவினர்கள் தொகுத்து தந்திருக்கிறார்கள்....


அவர்கள் தொகுத்துத் தந்த பல செய்திகளை ஒன்று சேர்த்து, அனைத்தையும் அழகாக கோர்த்து, ஒரு கதம்ப மாலையாக தொடுத்து தந்திருக்கிறார்கள். இந்த மாத வலைப்பதிவு இதழின் அனைத்து விவரங்களும்  உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம்.... இப்படிக்கு வாசகர் வட்ட சுட்டீஸ் "குல்கந்து" ரோஜாக்கள். 

==================================
@. புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டி :- சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"..... மார்கழி-மாத-படத்தில் உள்ள (8) எட்டு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் -வலைப்பதிவு இதழ் போட்டி என்-21.

சரியான விடை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" http://gulkanthu.blogspot.in/வலைப்பதிவர் இதழில் வெளியாகும். 

போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 10-01-2018 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடை எழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.

சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-20  கார்த்திகை-மாத-படத்தில் உள்ள (8) எட்டு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் -வலைப்பதிவு இதழ் போட்டி என்-20. போட்டிக்கான  சரியான  விடை,
விடை:- 1.இடம்வலமாக படம் திரும்பியுள்ளது, 2) தரையில் கிடைக்கும் உணவு வைக்கும் பிளாஸ்டிக் டப்பா 3) அம்மாவின் கையிலிருக்கும் பொருள் 4) தரை மற்றும் சுவற்றை சுத்தகரிக்கும் கோளின் தெளிப்பான். 5) 5லிட்டர் பிளாஸ்டிக் கேன் 6) அம்மாவின் தலைக்கு மேலே "இது" என்று எழுத்து  7) பையனின் கையில் இருக்கும் கத்தரிக்கோல் 8) அம்மாவின் தலையில் குங்குமப்பொட்டு.  

சென்ற மாத எட்டு-வித்தியாசங்கள் வலைப்பதிவர் இதழ்-20 போட்டிக்கான சரியான விடையை 52 நபர்கள்/போட்டியாளர்கள் எழுதி போட்டியில் கலந்துகொண்டனர். வாட்ஸ் ஆப், முகநூல், மற்றும் குறுஞ்செய்தி, தொலைப்பேசி மேலும் மின்னஞ்சல் மூலம் நிறைய போட்டிக்கான விடைகள் அனுப்பிவைத்தார்கள். சரியான விடையை 52 நபர்கள் மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=20, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=20, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=12, ஹிந்தி மொழியில்=0 நபர்களும், பிற மொழியில்=0 நபரும், மேலும் சிலர் எட்டுக்கும் அதிகமான தவறான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.
=============================================

@விளம்பரம்:- "இந்தப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்கள்":-  

==============================================
பயிற்சி வகுப்பில் சங்கீதமும் இங்கீதமும் பழகுவோம் மார்கழி மாதக் கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும்":- பற்றி சுட்டீஸ்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்போம் :-

@ வீடுகளில் கொலு வைக்கும்போது பெண்களை பஜனை பாடல்கள் பாடச்சொல்வது வழக்கம் ஆகவே நவராத்திரியில் தினமும் பஜனை பாடல்கள் பாடி, பெண்களுக்கு குங்குமம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்குவர். 

@ சங்கீத சபாக்களில் பஜனை பாடல்கள் பாடுவது தற்காலத்தில் பிரபலமாகி வருகிறது அதிலும் ஆண்கள் குழுவினர்கள் அதிகம் இப்படடிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.

@ வீடுகளில் சிறப்பு பூஜையின்போதும் வீடுகளில் நடக்கும் சாய் பஜனையிலும் பலர் விரும்பி பங்குகொண்டு பஜனைப்பாடல்கள் பாடிவருகிறார்கள்.

@ கோவில்களில் நடக்கும் ஐயப்ப பஜனைகளிலும், முக்கிய பண்டிகைகளில் பஜனைப்பாடல்கள் பாடப்படுகிறது 

@ அதிகம் பாடப்படும் பஜனைப்பாடல்கள் ஸ்ரீ கிருஷ்ண கணங்கள், முருகன் பக்தி பாடல்கள், சாய் பஜனைப் பாடல்கள் மற்றும் ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் பக்தி பாடல்கள்.

@ இரயில் வண்டிகளிலும் தினமும் பயணம் செய்யும் அலுவலக பணியிலிருப்பவர்களும் அவர்களின் பயண நேரத்தில் பக்தி பஜனைப்பாடல்கள் பாடிக்கொண்டே பயணிப்பதியும் பார்க்கலாம்.

@ பஜனைப் பாடல்கள் பாடுவதால் மனதிற்கு நிம்மதி கிடைக்கிறது.

@ பஜனைப் பாடல்கள் பாட கற்றுக்கொண்டதும் அந்த பஜனைகளில் வாசிக்கும் பக்கவாத்தியங்களை இசைக்க கற்றுக்கொள்ளவேண்டும் என்கிற ஆர்வம் உண்டாகிறது. 

@ பஜனை கச்சேரி பாடல் என்றாலே ஜாலரா இல்லாமல் பஜனைக்கச்சேரி கலைக்கட்டுவதில்லை.

@ பக்கவாத்தியங்களாக மிருதங்கத்தையும், தபேலா மற்றும் டோலக்கு போன்றவைகளை அனைத்து பஜனைக்கச்சேரியிலும் பார்க்கமுடியும்.

@ பஜனையில் ஆர்மோனியமும் வயலினும் சிறந்த பக்கவாத்தியங்களாக அனைத்து கச்சேரிகளிலும் பார்க்கிறோம் 


@ மோர்சிங் (தமிழில் இதை "யூத யாழ்" என்கிறார்கள்)என்று சொல்லும் வாயில் வைத்து வாசிக்கும் வாத்தியமும் பஜனைக்கச்சேரிக்கு உகந்த வாத்தியக்கருவியாக பார்க்கிறோம். 

=====================================
@ பகவான் நாம பஜனை பற்றிய மஹா பெரியவா அவர்களின் சொற்ப்பொழிவிலிருந்து:- 
தியானம், ஜபம், பூஜை, யக்ஞம் க்ஷேத்திராடனம் ஆகியவற்றைப் போலவே நம் தேசத்தில் நீண்ட காலமாக பகவந்நாமாக்களைக் கோஷ்டியாகப் பாடி பஜனை செய்கிற பழக்கமும் இருந்து வந்திருக்கிறது. இந்த ஜீவாத்மானது பரமாத்மாவுடன் தொடர்பு கொள்வதற்கு ஒரு பெரிய உபாயமாக நாம பஜனை தொன்றுதொட்டு தேசத்தில் அநுஷ்டிக்கப்பட்டு வந்திருக்கிறது. அநேகமாக கிராமம், நகரம் எல்லாவற்றிலும் பஜனை மடம், அல்லது பஜனைக் கூடம் என்றே ஒன்று கணக்கிடப்படுவதிலிருந்து, பஜனை பத்ததி நம் நாட்டில் எவ்வளவு செழிப்பாக இருந்திருக்கிறது என்று ஊகிக்கலாம். இந்த பஜனை மடங்களில் சனிக்கிழமை தோறும், ஏகாதசி தோறும் ஜனங்கள் எல்லோரும் சேர்ந்து பஜனை செய்வார்கள்.

கோயில்களில் பூஜையைப் பார்க்கிறோம். தெய்வத்தைத் தியானிக்கிறோம். பஜனையிலோ நாமே வாய்விட்டுத் தெய்வத்தின் நாமங்களையும், குணங்களையும், லீலைகளையும், பாடி ஈஸ்வரபரமாக மனஸை ஈடுபடுத்துகிறோம். பலர் சேர்ந்து கொண்டு சமூதாய வாழ்க்கை அடிப்படையில் பக்தி செய்கிற சிறப்பு பஜனைகளும் உண்டு. அவரவரும் ஆத்ம க்ஷேமத்தை அடைந்து, அதனாலேயே ஜீவ கோடிகளுக்கு க்ஷேமத்தைத் தர வேண்டும் என்று, தனி மனிதர் அடிப்படையிலேயே (Individual basis ) ஹிந்து மதம் முக்கியமாக அமைந்திருந்தாலும், கோயில், உத்ஸவம், பஜனை இவற்றில் கூட்டு வழிபாட்டு முறையும் (Congregational worship)இருக்கிறது.

இன்னிசையுடனும், வாத்திய கோஷத்துடனும் செய்கிற பஜனை எல்லா உள்ளங்களையும் சுலபமாக இழுத்து பகவத் ஸ்மரணத்தில் செலுத்துகிறது. ரகுபதி ராகவ ராஜாராம், ஹரே ராம ஹரே ராம ராம ஹரே ஹரே என்பது போல் சுலபமான வார்த்தைகளை மதுரமான சங்கீதத்தோடு கலந்து செய்கிற பஜனையால் எளிதாகத் தெய்வத்தை நினைவுகொள்ள முடிகிறது.

பஜனைக் கூடம் என்ற ஒர் இடத்தில் அமர்ந்து பஜனை செய்வதோடு, நகர சங்கீர்த்தனம் செய்கிற பழக்கமும் உண்டு. வைகுண்ட ஏகாதசி போன்ற புண்ணிய காலங்களில் ஜனங்கள் எல்லோரும் பகவந்நாமாக்களை பஜனை செய்தபடி வீதி வீதியாகச் செல்வதுதான் நகர சங்கீர்த்தனம் எனப்படுவது.

விசேஷமாக மார்கழி மாதத்தில் தினந்தோறும் அதிகாலையில் இப்படி வீதி வீதியாக பஜனை செய்து ஊர் முழுவதும் திவ்விய நாமங்களைப் பரப்புவதுண்டு.

இந்த நல்ல பழக்கம் மறுபடியும் நன்றாக உயிர் பெற்று வளர வேண்டும். கிராமங்களில் உள்ள பஜனை மடங்களில் பகவந்நாமம் இல்லாமல் வெறுமையாகப் போகவிடக் கூடாது. சமீப காலத்தில் பஜனை முறை நன்றாக விருத்தியடைந்து வருவதைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. நம் வேதம், ஆகமம், ஆசாரம் எல்லாம் ரொம்பவும் க்ஷீணமாகப் போயிருக்கிற இந்த நாளிலும் நம் மத அம்சமாக ஏதாவது ஒன்றாவது க்ஷீணிக்காமல், தினந்தினம் விருத்தியாகி வருகிறது என்றால் அது ராம பஜனைதான். இன்று நம் மதத்துக்காக ஒவ்வோர் ஊரிலும் இருக்கிற ஸத்சங்கமே பஜனைக் கோஷ்டிதான். அந்த மட்டும் சந்தோஷம்.

@கவானிடம் பக்தியை விருத்தி செய்வதினால் பகவானின் நாம் சங்கீர்த்தனமும், பகவத் குணங்களைப் பாடுவதும் முக்கியமான ஸ்தானம் பெற்றுள்ளது. பகவத்நாம போதேந்திரர்கள், ஸனாதந்த ஸ்வரூபியான பரமாத்மா ஜகத்தின் க்ஷேமத்தைக் கருதித் தனிப்பெரும் கருணை கூர்ந்து விஷ்ணு, பரமேஷ்வரன் முதலிய ரூபங்களை எடுத்துக் கொண்டான். உலகை உய்விக்க அந்த மூர்த்திகள் மட்டும் போதாது என்று கருதி, ஹரி சிவ, முதலிய நாமங்களாகவும் ஆகி, அவற்றில் எப்போதும் விழித்துக் கொண்டிருக்கிறான் என்கிறார். அதாவது, நாமங்கள் வெறும் பெயர் மட்டுமில்லை. மூர்த்தியைப் போல அவையும் ஸாஷாத் பகவானே. பகவானுக்கு உள்ள அத்தனை சக்தியும் நாமத்துக்கு உண்டு.

இவ்வாறு நாம சங்கீர்த்தத்தின் மூலம் பகவத் ஸ்வரூபத்தை சாஷாத்காரம் செய்த புண்ணிய புருஷர்களின் முகாரவிந்தத்திலிருந்து உற்பத்தி யான புனித கானங்களைப் பாடுவதால், பாபம் விலகி, புண்ணியம் கை கூடுகிறது. ஜயதேவர், தீர்த்த நாராயணர், ராமதாஸர், புரந்தர தாஸர், தியாகப்பிரம்மம், ஸதாசிவப் பிரம்மேந்திராள் ஆகியோரின் கீதங்கள், தமிழ்ப் பாடல்கள், ஹிந்தி, மகாராஷ்டிர பக்தி கீர்த்தனம் எல்லாம் மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகள் வகுத்துத் தந்த பத்ததியான சம்பிரதாய பஜனையில் பாடப்படுகின்றன. டோலோத்ஸவம், கொட்டனோத்ஸவம், வஸந்த கேளி என்றெல்லாம் பஜனையைப் பெரிய திருவிழாவாகக் கொண்டாடுவார்கள். கஷ்டமான சாதனையாக இல்லாமல், ஆனந்தமாக ஆடிப் பாடிக்கொண்டு பகவதநுபவத்தில் இருப்பது இதெல்லாம் வழிகள். பாகவதாதி சாஸ்திரங்களிலேயே, எந்தச் சிரமமான சாதனையும் செய்யச் சக்தியும் சௌகரியமும் இல்லாத கலிகாலத்தில், நாம் ஸங்கீர்தனம்தான் மோக்ஷ உபாயம் என்று சொல்லியிருக்கிறது. கலௌ ஸங்கீர்த்ய கேசவம்.

பலர் சேர்ந்து பண்ணுகிற பஜனை ஒருபுறம் இருக்கட்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள அனைவரும் மாலை வேளைகளில் வீட்டிலேயே ஒரு பத்து நிமிஷமாவது பகவத் நாமங்களைப் பாடி பஜனை செய்ய வேண்டும். இதில் காரிய சாத்தியமில்லாத சிரமம் எதுவும் இல்லை. குடும்பத்தினர் எல்லோரும் பூஜை அறையில் - அல்லது பூஜைக்கென்று அறை இல்லாவிட்டால், ஒரு குத்து விளக்கை ஏற்றி வைத்து அதன் முன் உட்கார்ந்து கீர்த்தனங்களைப் பாட வேண்டும். நாமாவளிகளை கானம் செய்ய வேண்டும்.

அவரவர்களும் தங்களுக்குரிய நித்ய கர்மாநுஷ்டானங்களை விடாமல் செய்துவிட்டு, அதோடு பஜனையும் செய்ய வேண்டும். பகவானைப் பாடுவதற்கு வெட்கமே வேண்டாம். கருணையே உருவான கடவுளின் நாமத்தைச் சொல்வதில் வெட்கத்துக்கு ஏது இடம்? பெரிய சங்கீத ஞானம், ராக பாவம், சாரீர வசதி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பக்தி பாவனைத்தான் முக்கியம்.

ஏதேதோ விளையாட்டுகளில் திரிந்துகொண்டிருக்கிற குழந்தை அம்மாவின் நினைப்பு வந்ததும், அவளிடம் வந்து, அம்மா அம்மா என்று கத்துகிறதல்லவா? அதில் வெட்கமோ, சங்கீத அழகோ இல்லை. லோக மாதாவான பரமாத்மாவை லௌகிக வியாபாரங்களிடையே சிறிது நேரமாவது நினைத்து இப்படியே ராமா, கிருஷ்ணா, சிவா, அம்பா என்று கத்த வேண்டும். இந்தப் பழக்கம் ரொம்பவும் நல்லது. நம் நித்திய க்ஷேமத்தையும், ஆனந்தத்தையும் பெருக்கவல்ல பெரிய Gift இது.

நன்றி :-தெய்வத்தின் குரல் (தொடரின் முதல் பாகம்) தி இந்து நாளிதழ்.

=====================================

செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும். என்கிற திருக்குறளின் வழியில் ஒவ்வொரு மாதமும் திருமதி ராகவன் அவர்கள் எழுதும் மூலிகை சமையல் பற்றிய தொடர்:-

ஹலோ சுட்டீஸ் போன வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று நம்முடைய வைஷாலி செக்டார் 4 இல் மைய பூங்கா இருக்கும் இடத்தில் நடைப்பயிற்சி செய்துகொண்டிருக்கும்போது இந்தக்கீரை அங்கு நிறைய இருப்பதைப்பார்த்தேன் உடனே அந்த கீரைகளை பறித்து நன்கு கழுவி சுத்தம்செய்து  "மணத்தக்காளி கீரை கூட்டு" சமைத்தேன் சாப்பிட மிக ருசியாக இருந்தது ஆகவே  இந்த மாதம் உடலுக்கு மருந்தாகும் மூலிகை சமையல் பற்றிய பயிற்சியில் நாம் கற்றுக்கொள்ள இருப்பது  "மணத்தக்காளி கீரை கூட்டு" :-
நாம் தினமும் ஒரு கீரை சமையல் சாப்பிடுவது மிகவும் நல்லது. அதிலும் உடலில் சூடு அதிகம் இருந்தால், மணத்தக்காளி கீரையை சாப்பிடுவது சிறந்தது. ஏனெனில் இந்த கீரை உடலின் வெப்பத்தைத் தணிக்கச் செய்யும். மேலும் இந்த கீரையை கூட்டு செய்து சாப்பிட்டால், வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்றவையும் குணமாகும். இக்கீரை கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கும். அதனால் தூக்கிப் போட்டுவிட வேண்டாம். வாய்ப்புண் என்றால் இந்தக் கீரை சாறு வாய் முழுவதும் படுமாறு நன்றாக மென்று விழுங்கினால் போதும், உடனே வாய்ப்புண் சரியாகிவிடும். 

அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளவாறு மணத்தக்காளி கீரையை கூட்டு செய்து சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும். சரி, இப்போது மணத்தக்காளி கீரை கூட்டு எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்: மணத்தக்காளி கீரை - 1 கட்டு பாசிப்பருப்பு - 1/2 கப் தேங்காய் - 1 மூடி (அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்) கடுகு - 1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை Published: Wednesday, June 3, 2015, 12:49 [IST] Subscribe to Boldsky தினமும் ஒரு கீரை சாப்பிடுவது மிகவும் நல்லது. அதிலும் உடலில் சூடு அதிகம் இருந்தால், மணத்தக்காளி கீரையை சாப்பிடுவது சிறந்தது. ஏனெனில் இந்த கீரை உடலின் வெப்பத்தைத் தணிக்கச் செய்யும். மேலும் இந்த கீரையை கூட்டு செய்து சாப்பிட்டால், வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்றவையும் குணமாகும். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளவாறு மணத்தக்காளி கீரையை கூட்டு செய்து சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும். சரி, இப்போது மணத்தக்காளி கீரை கூட்டு எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! 

தேவையான பொருட்கள்: மணத்தக்காளி கீரை - 1 கட்டு பாசிப்பருப்பு - 1/2 கப் தேங்காய் - 1 மூடி (அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்) கடுகு - 1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை, காய்ந்த வரமிளகாய் - 2,  உப்பு - தேவையான அளவு, தாளிக்க எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் மணத்தக்காளி கீரை, பாசிப்பருப்பு, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் நன்கு வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் கீரையுடன் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, லேசாக கடைந்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத் தூள், வரமிளகாய் சேர்த்து தாளித்து, கீரையுடன் சேர்த்தால், மணத்தக்காளி கீரை கூட்டு ரெடி!!!

என்ன சுட்டீஸ் நீங்களும் மணத்தக்காளி கீரை கூட்டு செய்வீர்கள் அல்லவா, மீண்டும் அடுத்தமாதம் வேறொரு மூலிகை சமையல் பற்றி பார்ப்போம்.  
நன்றி வணக்கம். 

======================================


சுட்டீஸ், நாங்கள் தொகுத்து வழங்கிய பதிவுகளில் உள்ள குறை நிறைகளை வாசகர்கள், அன்பான முறையில் எங்களுக்கு எடுத்துக்கூறி, எங்களது பதிவுகள் மேலும் சிறப்படைய வாழ்த்தி உற்சாகப்படுத்துமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.


இப்படிக்கு 



வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் தமிழ் ரோஜாக்கள். 

No comments:

Post a Comment