"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

"தமிழ் ரோஜாக்களின் குல்கந்து"

Sunday, June 18, 2017

வைஷாலி வாசகர் வட்ட "சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=14 வைகாசி மாதம்-தேதி 21-05-2017.

வைஷாலி வாசகர் வட்ட "சுட்டீஸ்-குல்கந்து"  இதழ்=14 வைகாசி மாதம்-தேதி 21-05-2017.


வருகை தாருங்கள், தமிழில் சிறுவர்கள் தொகுத்து வழங்கும் வலைப்பதிவர்களின் மாத இதழ், ஒவ்வொரு மாதமும் ஆங்கில மாதத்தின் 3-வது ஞாயிறுதோறும் (தமிழ் மாதத்தின் முதல் ஞாயிறு அன்று) இரவு 9 மணியளவில் வெளியாகும் சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ்.   http://gulkanthu.blogspot.in/


 

கற்க கசடற….!!                                       !வாய்மையே வெல்லும்!!

 “வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்
160/Sector-4, Vaishali, Ghaziabad, NCR-New Delhi.-201012
e-mail:  vaishalireaderscircle@gmail.com
___________________________________________________________________
சுட்டீஸ் இதழ்=14 சவைகாசி மாதம்-தேதி 21-05-2017வணக்கம், தாங்களின் வருகைக்கு நன்றி, இந்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழில்" -வைகாசி மாத வலைப்பதிவு:- இந்த இதழின் ஆசிரியராக, தொகுத்து வழங்குபவர்:- (Editor of the Page)  வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் குழுவினர்கள் -வைஷாலி -NCR-புது தில்லி.

வைஷாலி வாசகர்வட்ட 39வது சந்திப்பு, வைகாசி மாத கல்வித் தேர்வு மற்றும் பொது அறிவு தேர்வு, போன்ற பல்வேறு தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளுதல் பற்றிய  பயிற்சி மாதக் கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும். 


அடுத்து வரும் ஜூன் மாதம் -2017, 18-06-2017 ஆனி -மாத வலைப்பதிவு இதழின் ஆசிரியராக, (Editor of the page) இந்த வலைப்பக்கத்தை தொகுத்து வழங்க ஆவலுடன் காத்திருப்பவர் யார்? விருப்பம் உள்ளவர்  உங்கள் விருப்பத்தை உடனே தெரியப்படுத்துங்கள். மின் அஞ்சல் "vaishalireaderscircle@gmail.com"

சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ் -14 வைகாசி மாதம், 21-05-2017, ஆங்கிலமாதத்தின் 3வது ஞாயிறு அன்றய  வைஷாலி வாசகர் வட்டத்தின் 38வது வாசகர் வட்ட சந்திப்பு மற்றும் விழிப்புணர்வு பயிற்சி மாதக் கொண்டாட்டங்களும். நிகழ்ச்சிகளும்.....
21-05-2017 அன்றய நமது 39-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில்:- ,  

வைஷாலி வாசகர் வட்டத்தின் 39வது வாசகர் வட்ட சந்திப்பு 21-05-2017 தேதி, 3-வது ஞயிறு அன்றய வைகாசி மாத கொண்டாட்டங்களும்  நிகழ்ச்சிகளும்.... 


வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, 
தொடர்ந்து  எங்க வீட்டு "நூலகம் " 
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் 
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம்)
தொடர்ந்து ......

"இந்த மாத தலைப்பைச் சார்ந்த"  கல்வித் தேர்வு மற்றும் பொது அறிவு தேர்வு, போன்ற பல்வேறு தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளுதல் பற்றிய பயிற்சி மாதக் கொண்டாட்டங்களும்நிகழ்ச்சிகளும். போட்டிகளும் பரிசுகளும்.. என நடந்தேறிய அன்றய நிகழ்ச்சியில் உதவிய அனைவரையும் பாராட்டி, நிகழ்ச்சி இனிதாக நிறைவுபெற்றது.

"ஒவ்வொரு மதமும் ஒரு விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை வகுப்புகள். என இந்த வருடம் முழுவதும் கற்றுக்கொள்வோம், தெரிந்துகொள்வோம் பயிற்சிப் பட்டறை மாதங்களின் வருடமாக, நமது வைஷாலி வாசகர் வட்டத்தின், ஒவ்வொரு மாதமும், ஆங்கில மதத்தின் 3வது ஞாயிறு அன்றைய வாசகர் வட்ட சந்திப்பில், ஒவ்வொரு மதமும் ஒரு விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை வகுப்புகள்...இந்த மாதம்:-கணினியில் தமிழ், கை தொலைப்பேசியில் தமிழ் என நவீன வழியில் தமிழ் மொழியை எடுத்தாளும் பயிற்சி மாதக்  கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும். கதைகள் மற்றும் கட்டுரைகள், பயிற்சிப்பட்டறை சார்ந்த போட்டிகளும் பரிசுகளும்  என இந்தமாத இதழில் பல விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.   

மேலும் இந்த மாத சுட்டீஸ்களின் ஏராளமான செய்திகளை மிகவும் பயனுள்ள வகையில் நமது வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் "குல்கந்து" குழுவினர்கள் தொகுத்து தந்திருக்கிறார்கள்....

அவர்கள் தொகுத்துத் தந்த பல செய்திகளை ஒன்று சேர்த்து, அனைத்தையும் அழகாக கோர்த்து, ஒரு கதம்ப மாலையாக தொடுத்து தந்திருக்கிறார்கள். இந்த மாத வலைப்பதிவு இதழின் அனைத்து விவரங்களும்  உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம்.... இப்படிக்கு வாசகர் வட்ட சுட்டீஸ் "குல்கந்து" ரோஜாக்கள். 



I. முதலில் குட்டி கல்கண்டு தகவல்கள்:-  
இந்தமாதம் அனைவருக்கும் பரீட்சைக்கு படிக்கும் மாதம் என்பதால் அதிகம் விவரங்கள் பதிவுகள் இல்லை.

*தெரிந்து கொள்வோம்*
**************************************
நம்பில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் *IAS*, *IPS* பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம்.


ஆனால், இதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்:-
1. IAS - Indian Administrative Service
2. IPS - Indian Police Service
3. IFS - Indian Foreign Service
4. IFS - Indian Forest Service
5. IRS - Indian Revenue Service (Income Tax )
6. IRS - Indian Revenue Service ( Customs & Central Excise )
7. IAAS - Indian Audit and Accounts Service
8. ICAS - Indian Civil Accounts Service
9. ICLS - Indian Corporate Law Service
10. IDAS - Indian Defence Accounts Service
11. IDES - Indian Defence Estate Service
12. IIS - Indian Information Service
13. IPTAS - Indian Post & Telecom Accounts Service
14. IPS - Indian Postal Service
15] IRAS - Indian Railway Accounts Service
16. IRPS - Indian Railway Personal Service
17. IRTS - Indian Railway Traffics Service
18. ITS - Indian Trade Service
19. IRPFS - Indian Railway Protection Force Service
இத்தனை பதவிகளும் தேர்வுகளும், இந்திய ஆட்சி, அதிகார, ஆளுமை பணிகளுக்கான பணி இடங்கள் ஆகும்.

இவை அனைத்துக்கும் தேவையான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு மட்டுமே...

பெரிய கல்வி தகுதி ஏதும் தேவை இல்லை. ஒரு பட்டப்படிப்பும் முறையான பயிற்சியும் இருந்தால், யார் வேண்டுமானாலும் இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப்பணி பதவிகளி்ல் அமரலாம்.

இத்தனை வாய்ப்புகள் இருப்பது பெரும்பாலான இளம் பட்டதாரிகளுக்கு தெரிவதில்லை.

நம் தமிழக இளைஞர்களுக்கு தெரிந்தது எல்லாம்,*விஏஒ பதவி, கிளார்க் பதவி, சத்துணவு அமைப்பாளர் பதவி மட்டுமே.* இனியாவது, உயர் பதவிகளுக்கு இந்திய அளவிளான தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ளுங்கள்.


எல்லா உயர் பதவி தேர்வுகளுக்கும் தகுதி ஒரே ஒரு பட்டப்படிப்பு தான். எல்லாவற்றுக்கும் முறையான பயிற்சி தான் முக்கியம்.
*முயற்சி செய்யுங்கள்.*

*பயிற்சி செய்யுங்கள்.*

*"வெற்றி" நிச்சயம்.*

*உங்களுக்கு தெரிந்த BEST JOB PLS TYPE YOUR VALUABLE COMMENTS.

@ டிஸ்கவரி சேனலி கரடி மீன் சாப்பிடுவதை காண்பித்து அதில் ஒரு முக்கிய விவரம் உள்ளது என்று கூறினார்கள் கரடி மீனை முழுதும் சாப்பிடாமல் அதோட மூளை. அப்புறம் கொஞ்சம் பகுதி மட்டும் தான் சாப்பிட்டு இருக்கு. முழுவதையும் ஏன் சாப்பிடவில்லை  என்றால் கரடிக்கு கொழுப்பு சத்தின் கலோரி எதில் அதிகமாக இருக்குமோ அதை மட்டும் சாப்பிட்டு மற்றவற்றை விட்டுவிடுமாம் காலையில் பார்த்தது இறைச்சி என்பதால் எல்லாத்தையும் சாப்பிடவில்லை. கரடிக்குதான் என்ன ஒரு அறிவு பார்த்தீர்களா. நாம் உண்ணும் உணவில் எதில் எதில் என்ன சத்து இருக்கிறது எது சாப்பிடனும் சாப்பிட கூடாது என்பதை தெரிந்துகொள்ள புத்தகத்திலும்  இனைய தளத்திலும். விஞ்ஞானிகள் டாக்டர்கள். எந்த உணவில் என்ன சத்து இருக்கு என்று சொல்லியிருக்கிறார்களோ அதுதான் நமக்கு ஆதாரம். நமக்காக எதுவும் தெரியல. நிறைய விலங்குகள் இப்படி இயற்கையான அறிவு அவைகளுக்கு இருக்கு. சில விலங்குகள் செடிகளை சாப்பிடாது பழங்கள் கூட சிலது தவிர்க்குமாம்.
நமக்கு தெரிந்துகொள்ள கொஞ்சம் பொறுமையாக இருக்கனும் ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்து முடிவு சொல்லும் வரை காத்திருக்கனும். நாம் ஆறாவது அறிவு பெற்றவர்கள் இல்லையா? எத்தனையோ வளர்ச்சி அடைந்து இருக்கிறோம் என்று பெருமை படும்போது எதோ ஒரு இடத்தில் சொல்ல முடியாத அளவு வீழ்ச்சி அடைந்து இருக்கிறோம் என்பதை உணராமல் இருக்கிறோமோ என தோன்றுகிறது. 

விசித்திர கணக்கு வழக்கு 

ஆசிரியர்கள், மாணவர்களை ‘பெயில்’ ஆக்குவது இயல்பான ஒன்று. ஆனால் ஆசிரியரை நீதிபதி ‘பெயில்’ ஆக்கிய விசித்திர சம்பவம், காஷ்மீர் ஐகோர்ட்டில் நடந்தது.

தெற்கு காஷ்மீரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் முகமது இம்ரான்கான் என்பவர் ஆசிரியராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து ஒருவர் காஷ்மீர் ஐகோர்டில் ‘ரிட்’ வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில், முகமது இம்ரான்கான் பெற்ற சான்றிதழ்கள் அனைத்தும் உரிய அங்கீகாரம் பெறாதவை என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி முஜாப்பர் உசேன் அட்டார், அந்த ஆசிரியரின் அறிவாற்றலை சோதிக்க விரும்பினார்.

அவருக்கு ஆங்கிலத்தில் ஒரு வரியை கொடுத்து உருது மொழியிலும், உருது மொழியில் ஒரு வரி தந்து ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்குமாறு கூறப்பட்டது.

ஆனால் அவரது மொழி பெயர்ப்பு சரியில்லை என்பதால் நீதிபதியை கவரவில்லை.

உடனே அவரை ‘பசு’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதுமாறு கூறினார். அதிலும் அவர் சரியாக எழுதாததால் தேறவில்லை.

கணக்கு நன்றாக வரும் என்று அவர் கூறியதால், 4–வது கிரேடு கணித வினா ஒன்று தரப்பட்டது. அதிலும் அவரால் சரியான விடையை எழுத முடியவில்லை.

இதையடுத்து அவரை ‘பெயில்’ ஆக்கிய நீதிபதி, அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

@ "முப்பதாயிரம்" என்று அழைக்காப்படும் ஊர்  எங்குள்ளது?
அ ) சென்னையில், ஆ) பெங்களூருவில்,  இ) புது தில்லியில்,  ஈ) மும்பாயில்  விடை:- இ) புது தில்லியில் (ஹிந்தியில் தீஸ் ஹசாரி -தமிழில் முப்பதாயிரம்) 

@  மொழிக் கணக்கு :-
ஒரு எலி தன் குடும்பத்தோடு போய்க் கொண்டிருந்தது.. அப்போது திடீரென ஒரு பூனை வழி மறித்தது.

தாய் எலியும், குட்டி எலிகளும் பயத்தில் உறைந்து நிற்க, தந்தை எலி தைரியமாக முன்னே பாய்ந்து, லொள்... லொள்.. என்று சத்தமிட்டது.

அதிர்ச்சி அடைந்த பூனை ஓடிவிட்டது.

குட்டி எலி அப்பாவிடம் இது என்னா கூத்து..? என்று கேட்க

அப்பா எலி சொன்னது..
அதுக்குதான் பெரியவங்க சொல்லுவாங்க.. ரெண்டு பாஷை தெரிஞ்சு வச்சுக்கறது நல்லதுன்னு..!



@. புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டி :- சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"..... "வைகாசி-மாத-படத்தில் உள்ள (8) எட்டு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் -வலைப்பதிவு இதழ் போட்டி என்-14.

சரியான விடை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" http://gulkanthu.blogspot.in/வலைப்பதிவர் இதழில் வெளியாகும். 

போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 10-06-2017 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடை எழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.
==========================================

சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-13   மே -2017 சித்திரை -மாதம்  வலைப்பதிவு இதழ் 8 வித்தியாசப் போட்டி என்-13. போட்டிக்கான  சரியான  விடை,

1)சிறுவன் உணவில் ஜாம்-பழரசம் தடவியுள்ளது 2) தந்தையின் கழுத்து பட்டை (டை) நிறம் 3) தாயின் கழுத்து மேல் அங்கியின் நிறம் 4) சிறுவன் தட்டின் அருகே  முள் கரண்டி 5) படத்தில் உள்ள எழுத்துக்கள் 6)  பெண்ணின் கண்கள் 7) வாசகர் வாசகர்கள் என்பதை வேறுபடுத்தும் எழுத்துக்கள் 8)வழக்கமான ஓவியம் வரைந்தவரை கௌரவிக்கும் வகையில் அவரது பெயர் கையொப்பத்தில் வட்டம் அல்லது பெயரின் கீழ் கோடிட்டு காட்டுதல்.  

சென்ற மாத ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடையை 15 நபர்கள் மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=7, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=05, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=03, ஹிந்தி மொழியில்=0 நபர்களும், பிற மொழியில்=0 நபரும், மேலும் சிலர் ஆறுக்கும் அதிகமான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.
================================================

@ முக்கிய கணித சூத்திரங்கள்:- 

@நுண்ணறிவு கேள்விகளும் அதற்கான விளக்கங்களும்:- 
ஒரு வகுப்பறையில் ஆண்களும் பெண்களும் 9:3 என்ற விகிதத்தில் உள்ளனர். 4 பெண்கள் புதிதாக வகுப்பறையில் இணைந்ததும் விகிதம் 5:3 என மாறியது எனின் முன்னர் இருந்த மாணவர்களது எண்ணிக்கை யாது?

உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ?
பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்lதை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது...

ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்.., மூன்று வயதில் முன்பள்ளி என்ற சித்ரவதை அங்கே இல்லை...

கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை...

எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான்...

இவற்றில் இருந்து வேரோடு பிடுங்கி வகுப்பறைக்குள் நடுவதால், அறிவு அதிவேக வளர்ச்சி அடையும் என எண்ணுவது மூடநம்பிக்கை...
ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை...

ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவு தான். அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு, மற்றும் பிற கலைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு...
ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம்...

முக்கியமாக, 13 வயது வரை நிலை என்ற தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது... 

முன்னேற்ற அறிக்கை தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது...

தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்...

கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை..
.
சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை...
இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை...

மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம்...

ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்...

ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது...

முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம்...

கோடீசுவரராக இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும்… அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும்... 

‘என் பொண்ணு இன்டர்நேசுனல் சுகூல்ல படிக்கிறா’ என பெருமை காட்ட முடியாது...

அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி என்ற உத்தரவாதம் உள்ளது...
அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர்...

அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர்... ‘டியூஷன்’என்ற அருவருப்பான கலாசாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை...

தேர்வுகளை அடிப்படை முறைகளாக இல்லாத இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர்...

"இது எப்படி?" என்பது கல்வியாளர்களுக்கே புரியாத புதிர்...

அந்தப் புதிருக்கான விடையை, ஐ.நா சபையின் ஆய்வு முடிவு அவிழ்த்தது...
உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது..

மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும் இல்லை...

பின்லாந்து கல்வி முறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர்...

உலகின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்கின்றனர்...

நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது...

ஆனால், இப்படி தங்களை நோக்கி வீசப்படும் புகழ்மாலைகளை பின்லாந்தின் கல்வியாளர்களும் அமைச்சர்களும் ஓடோடி வந்து ஏந்திக்கொள்வது இல்லை...

அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், "‘பின்லாந்து கல்வி முறைதான் (Finnish Education system) உலகிலேயே சிறந்தது எனச் சொல்ல முடியாது... ஏனெனில் "OCED" அமைப்பின் ஆய்வில் எல்லா உலக நாடுகளும் பங்கேற்காத நிலையில் இப்படி ஒரு முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது...

எங்களைவிட சிறந்த கல்விமுறையும் இருக்க வாய்ப்பு உள்ளது"’ என்கிறார்கள்...

இல்லாத நாற்காலியைத் தேடி எடுத்து ஏறி அமர்ந்து, தனக்குத்தானே முடிசூட்டிக்கொள்ளும் தற்பெருமையாளர்கள் நிறைந்த உலகத்தில் இது பண்புமிக்க பார்வை...

மதிக்கத்தக்க மனநிலை.

பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, மிகுந்த சமூகக் கௌரவம் உடையது...
அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு...

மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ் நாள் லட்சியம்...

அதே நேரம் அங்கு ஆசிரியர் ஆவது அத்தனை சுலபம் அல்ல!..

மேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களில் இருந்து ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்...
ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி எடுக்க வேண்டும்...

பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி...

ஒரு வருடத்துக்கு வெவ்வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில் ஆசிரியர் பயிற்சி...

ஏதாவது ஒரு பாடத்தில் (project) திட்டப்பணி  ...

குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பது... 

நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ்...

தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்துவச் சான்று… என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும்...

இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் சமரசம் இல்லாத முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது!...

இப்போது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது...

பெற்றோர்கள், கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்கள், ஆட்சியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது...
குழந்தைகள் வளர்ப்பில் நாம் தான் கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் இருக்கிறது...

முதலில், பிள்ளைகளுக்கு நல்ல சிந்தனைகளை ஏற்படுத்துங்கள்!...

ஒரு குழந்தையைவிட நாம் உயர்ந்தவர் என்று நினைக்காதீர்கள்….

01. பிள்ளைகள் எதாவது செய்தால் எப்போதும் குறை கூறுதல், அவர்கள் பாராட்டும்படி செய்தாலும் கண்டு கொள்ளாதிருத்தல் போன்ற செயல்களை பலர் செய்கிறார்கள் இதனால் பிள்ளைகளின் மன வளர்ச்சி குன்றும்.

02. எந்தக் குழந்தையும் பின்னால் எப்படி ஆகுமென எவருமே கூற முடியாது. மூடன், அறிவாளியாகலாம்... பைத்தியம், தெளிந்த சித்தமுடையவனாகலாம்...  ஆகவே பிள்ளைகளை ஒருகாலமும் தப்பாக மட்டும்கட்டி அலட்சியம் செய்யக் கூடாது.

03. தோமஸ் அல்வா எடிசன் மீத்திறன் குறைந்த மாணவர் என் பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டவர் பின்னாளில் ஆயிரம் கண்டு பிடிப்புக்களுக்கு அவரே அதிபதி.

04. லூயி பாஸ்டியர் சராசரி மாணவனாக பாடசாலையில் இருந்தவர் பின்னாளில் நோபல் பரிசு வாங்கினார்.

05. ஆல்பிரட் ஐன்ஸ்டைனை, அவர் ஆசிரியர், "இவனை போன்ற மூளை அழுகிய மாணவனை நான் பார்த்ததே இல்லை" என்றார் அவர் ஆசிரியர் ஆனால் அவரே 20 ம் நூற்றாண்டின் அதி சிறந்த விஞ்ஞானியானார்.
06. குழந்தைகளுடன் ஒரு நாளில் சிறிது நேரமாவது பேசுங்கள், நல்லதைப் பேசுங்கள் கனிவுடன் பேசுங்கள். அவர்கள் குறைகளைப் பற்றி அதிக நேரம் பேசாதீர்கள் நிறைகளை பற்றிப் பேசுங்கள்.

07. பிள்ளைகளுடன் யாரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள், அவன் அவனே.. நீங்கள் நீங்களே.. நீங்களே முன்னுதாரணமாக இருங்கள். உங்களைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.

08. வாழ்வில் வெற்றிபெற்றவரைப்பற்றி பேசுங்கள், ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களைப்பற்றி பேசுங்கள்.

09. எப்படி இருக்கக் கூடாது என்று ஒப்பிட்டு பேசுவதைவிட எப்படி இருக்க வேண்டுமென ஒரு முன்னுதாரண மனிதரைப்பற்றிப் பேசுங்கள்.

10. பிள்ளைகளுக்கு வீட்டுக்குள் விலங்கிடாதீர்கள் வீடு ஒரு சிறைச்சாலைக் கூடமல்ல மனிதர்களை தோற்றுவிக்கும் கோயில்.

11. நல்ல மேற்கோள்களை கொடுங்கள், சுதந்திரம் கொடுத்து, கட்டாயப்படுத்தி வழிக்குக் கொண்டு வாருங்கள்.

12. மலர் தூவியுள்ள பாதையைப்பற்றி பிள்ளைகளுக்கு சொன்னால் அவர்கள் முள் நிறைந்த பாதையை புரிந்து கொள்வார்கள்.

13. உழைப்பைப்பற்றி சொல்லிக் கொடுங்கள் அவர்கள் உழைப்பில்லாத கேடுகளை புரிந்துகொள்வார்கள்.

14. வெற்றி பெற்றவர்களை சொல்லும்போது தோல்வியின் காரணங்களை அவன் அறிந்து கொள்வான்.

15. சுறு சுறுப்பை சொல்லிக் கொடுத்தால் அவன் சோம்பலை அடையாளம் காண்பான், விதியை வென்றவர்களை சொல்லும்போது அவன் வேதனையில் நொந்து அழிந்தவர்களை கண்டு கொள்வான் – இது போதும்...

முதலில் நாம் மாற வேண்டும்.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு...
மாற்றம் ஒன்றே மாறாதது...
நல்ல மாற்றம் தான் வளர்ச்சியை தரும்.
பின்லாந்தின் கல்விமுறையிலிருந்து நாம் கற்றுக் கொண்டு மாறுவோம்!.
குழந்தைகளின் எதிர்காலத்தைப் சிறப்பாக மாற்றுவோம்
நன்றி - இணையம் 


விடை தெரிந்தவர்கள் உங்கள் பதில்களை பதிவு செய்யவும்
1) உலகில் அதிக விலை கூடிய நூலை வெளியிடட அச்சகம் எது?
2) நவீன இயந்திர ரோபோவின் தந்தை யார் ?
3) விடுதலை போராடடத்திற்காக சிறை சென்ற முதல் பெண் மணி யார்?
4) உலகில் அதிக சிலை வடிக்கப்படட மனிதர் யார்?
5) அமெரிக்காவின் அதிபர் மற்றும் உப அதிபர் பதவியை தேர்தல் இல்லாமல் பெற்ற நபர் யார் ?
6) ATM இயந்திரம் போல முதலுதவி சிகிச்சை மருந்து பொருட்களை வழங்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த சிறுவன் யார் ? எந்த நாடடவர்?
7) ஆழ் கடலில் புகைப்படம் எடுக்கும் முறையை கண்டுபிடித்தவர் யார்?
8) திருக்குறளில் உள்ள ஆயுத எழுத்துக்களின் எண்ணிக்கை எத்தனை?
9) 2016ல் விஸ்ணுகார் விருதை பெற்றவர் யார்? எந்த நாட்டவர் ?
10) ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்ற்கு குறைந்த மணி நேரத்தில் நீந்தி சென்ற பெண்மணி யார்? எந்த நாட்டவர் ?

@ 520- பொது அறிவு கேள்வி பதில்கள்

1.சாலைச் சந்திப்பில் குறியீடாக பச்சை விளக்கு எரிந்தால் என்ன செய்ய வேண்டும்?சாலையைக் கடக்க வேண்டும்
2.காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?சீனா
3.உமியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் எது?கம்ப்யூட்டர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிலிக்கான்
4.ஆண்டர்சன் கூறிய நான்காவது அறிவு சார் நிலை?பயன்படுத்துதல்
5.ஜீன்ஸ்துணி யாரால்எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?லீவைஸ்ட்ராஸ், 1848
6.காவிரி நதி எந்த மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது?கர்நாடகா
7.வருமான வரித்துறையில் பயன்படுத்தப்படும் TDS எதைக் குறிக்கிறது?Tax Deducted at Source
8.விதிவருமுறைக்கு படிநிலைகளை அமைத்தவர்?ஹெர்பார்ட்
9.ஸ்லாத்கோடியாக் மற்றும் ஹிமாலயன் பிளாக் எந்த விலங்கினத்தைச் சார்ந்தது?கரடி
10.பால் பதனிடும் முறையைக் கண்டுப்பிடித்தவர் யார்?லூயி பாஸ்டியர்
11.சரிவிகித உணவில் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் எவை?தானியங்கள்முளைக் கட்டிய பயறு வகைகள்
12.நமது தேசியத் தலைநகர்?.புது டில்லி.
13..ஜப்பான் இந்தியாவின் அண்டை நாடுகளின் பட்டியலில் கிடையாதுசரியா?தவறா?.சரி.
14..இந்தியாவில் அமைந்துள்ள பாலைவனம் ____________?தார்
15.ஷேக்ஸ்பியரின் மேக்பத் நாடகத்தின் பெரும்பாலான பகுதி எந்த இடத்தில் நடந்தது?ஸ்காட்லாண்ட்
16.கேரம் விளையாட்டின் துவக்கத்தில் எத்தனை கருப்பு காயின்கள் இருக்கும்?9
17.“வீடு” மற்றும் தாசி” திரப்படங்களுக்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றவர் யார்?அர்ச்சனா
18.உலகில் வெவ்வேறு மொழிகள் பேசப்படுவதற்கான காரணம்?புதுப் புது ஒலிக் குறியீடுகள் அமைந்தமை
19.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் ஹாலிவுட் திரைப்படம்?COUPLES RETREAT
20.மதராஸ் என்பது எந்த ஆண்டில் சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது?1996ஆம் ஆண்டு கலைஞரால் மாற்றப்பட்டது
21.யானைகளுக்கான சரணாலயம் உள்ள தமிழக மாவட்டம்?நீலகிரி
22.தேசிய வனவிலங்கு வாரம் முதன்முதலாக எந்த ஆண்டுத் தொடங்கப்பட்டது?1955
23.தேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது?பிப்ரவரி 28 ஆம் நாள்
24.நெல் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம் பெறும் நாடு எது?இந்தியா
25.பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் அலகு?ரிக்டர்
26.சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட காலண்டர்?இஸ்லாமியக் காலண்டர்
27.விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யார்?நீல் ஆம்ஸ்ட்ராங்
28.சந்திராயன் எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது?2008 அக்டோபர் 22
29.தென்றலின் வேகம்?5 முதல் 38 கி.மீ.
30.காற்றாலை மின் உற்பத்தி செய்வதில் இந்தியாவில் முதல் இடம் வகிக்கும் மாநிலம்?தமிழ்நாடு
31.தமிழ்நாட்டின் மழையளவில் எத்தனை சதவீதம் வடகிழக்குப் பருவக்காற்றால் கிடைக்கிறது?48%
32.இரவில் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்று?நிலக்காற்று
33.இந்தியாவின் இயற்கை அமைப்பை எத்தனைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம்?6
34.நீர் பற்றாக்குறையைப் போக்க இந்திரா காந்தி கால்வாய் எந்த மாநிலத்தில் வெட்டப்பட்டது?ராஜஸ்தான்
35.எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்?பச்சேந்திரி பாய்
36.வ.உ.சி. எந்த ஆண்டு காலமானார்?1936
37.பரப்பளவில் இந்தியா உலகளவில் ________ இடத்திலுள்ளது?7
38.பத்தமடைப்பாய் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது?திருநெல்வேலி
39.தமிழ்நாடு என்ற பெயர் என்று மாற்றப்பட்டது?14.01.1969
40._______________ நவீன தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்?டேகார்டு
41.காடுகளில் உயிரினங்கள் அழிவதற்கு காரணம்?பருவ நிலையில் மாற்றம் ஏற்படுகிறதுநீர் சுழற்சி பாதிக்கப்பட்டுள்ளதுஉணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது
42.இந்தியாவில் முதன் முதலில் வன விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட விலங்கு பூங்கா?கார்பெட் தேசிய பூங்கா
43.தேசிய வனவிலங்கு உயிர்வாழ் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?1983
44.சாம்பல் அணில் வனவிலங்கு சரணாலயம் ____________________ இடத்தில் உள்ளது?ஸ்ரீவில்லிபுத்தூர்
45.SPCA என்பது?Society for the Prevention of Cruelty to Animals
46.பள்ளியில் அனைத்து அலுவல்களும் யாருடைய தலைமையில் நடைபெறுகிறது?தலைமையாசிரியர்
47.எந்த இடம் குழந்தைகளுக்கு பல அனுபவங்களை தரவல்லது?வீடு
48.சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைமையகம் எங்குள்ளது?லாசேன் (சுவிட்சர்லாந்து)
49.பிறக்கும் போது குழந்தையின் மூளையின் நிறை சுமார் _______கிராமாகவுள்ளது?350
50.கார்டனர் நுண்ணறிவு மிக்கோரின் செயல்பாடுகளை ஆராய்ந்து எத்தனை வகை நுண்ணறிவுகள் உள்ளன எனக் கண்டார்?10
51.______________ என்பவர்தான் முதன் முதலில் நுண்ணறிவு ஈவு என்னும் சொல்லை அறிமுகப்படுத்தினார்?டெர்மன்
52.நுண்ணறிவு ஈவு கணக்கிடும் போது சோதிக்கப்படுவோர் எத்தனை வயதிற்கு குறைவாக இருத்தல் வேண்டும்?16
53.இந்தியாவிலுள்ள ATM கார்டுகளுக்கான ரகசிய குறியீட்டு எண் எத்தனை இலக்கங்கள் உடையது?4
54.ஏற்காடு எந்த மாவட்டத்தில் உள்ளது?சேலம்
55.நமது நாட்டுக் கொடி ____________ வண்ணங்களைக் கொண்டது?மூன்று
56.உயிர் வாழ்வன பற்றிய அறிவியல்?உயிரியல்
57.நடிகர் R.பார்த்திபனின் மகள் கீர்த்தனா எந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார்?கன்னத்தில் முத்தமிட்டால்
58.இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் யார்?ராஜகோபாலச்சாரி
59.ISRO-ன் விரிவாக்கம்?Indian Satellite Research Organization
60.PSLV-ன் விரிவாக்கம்?Polar Satellite Launch Vehicle
61.NOKIA-ன் தலைமையகம் உள்ள நாடு?ஃபின்லாந்து
62.1945-ல் வெளிவந்த மீரா திரைப்படத்தில் நடித்தவர்?எம்.எஸ்.சுப்புலட்சுமி
63.”ஜூராசிக் பேபி” என்ற நாடகத்தை நடத்தும் நிறுவனம்?கிரேஸி கிரியேஷன்ஸ்
64.பட்டம்மாளின் பேத்தி யார்?நித்யஸ்ரீ மஹாதேவன்
65.2009 ஆம் ஆண்டில் ஒலிக்கலவைக்கான அகாடமி விருதைப் பெற்றவர்?ரசூல் பூக்குட்டி (ஸ்லம்டாக் மில்லியனர்)
66.”ஜீவ்ஸ்” என்ற நூலை எழுதியவர் யார்?பி.ஜி.வுட் ஹவுஸ்
67.இசையமைப்பாளர்கள் எஸ்.டி.பர்மன்ஆர்.டி.பர்மன் எந்த அரசக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்?திரிபுரா
68.சுனில் கவாஸ்கரின் சகோதரியை மணந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?ஜி.ஆர்.விஸ்வநாத்
69.சங்கீத வித்வான் வரதாச்சாரியாரின் பெயருக்கு முன் வரும் அடைமொழி எந்த விலங்கைக் குறிக்கும்?டைகர்
70.இந்துக்களின் கடவுளான சரஸ்வதிக்கு கோயில் உள்ள இடம்?கூத்தனூர்
71.ராகங்கள் மொத்தம் எத்தனை?16
72.தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சின்னத்தில் உள்ளது எது?குடை
73.இந்திய ரூபாய் நோட்டில் என்னென்ன மிருகங்கள் உள்ளன?காண்டாமிருகம்,யானைபுலி
74.அறிவியல் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் எந்த நாட்டில் பிறந்தார்?ஸ்வீடன்
75.”சோன்ங்கா” என்ற மொழி எந்த ஆசிய நாட்டின் ஆட்சி மொழியாகும்?பூடான்
76.”கவான்சா” என்பது எந்த நாட்டின் நாணயம்?அங்கோலா
77.”தி பிரிட்ஜ் ஆன் ரிவர் கவாய்” என்ற படத்தின் படப்பிடிப்பு எந்த நாட்டில் செட் அமைத்து எடுக்கப்பட்டது?தாய்லாந்து
78.மயன் நாகரீகத்தின் சுவடுகள் எந்த நாட்டில் உள்ளது?மெக்சிகோ
79.அணு சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ள நாடு எது?அமெரிக்கா
80.அதிக அளவில் சர்வதேச நேரம் கொண்ட நாடு எது?ரஷ்யா
81.”வாலிபர் தினம் (அடல்ட்ஸ் டே)” கொண்டாடும் நாடு எது?ஜப்பான்
82.உலக வரலாற்றில் பழமையான மரமாக கருதப்படுவது?பேரீச்சை மரம்
83.மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முதன் முதலில் எந்த ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கியது?1801
84.ஒரு முறை எழுதி பல முறை வாசிக்கும் நினைவு முறைக்கு வார்ம் (WORM)என்று பெயர். இதில் WORM என்பது?Write Once Read Many
85.பூனைக் குடும்பத்தில் மிக அழகான இனம்?பனிச் சிறுத்தை
86.நூறு பூஜ்யங்கள் கொண்ட எண்களை ______________ என்று அழைப்பர்?கூகோல்
87.விமானத்தை முதன் முதலில் போரில் பயன்படுத்திய நாடு?இத்தாலி
88.தாஜ்மஹால் ______________ கல்லினால் கட்டப்பட்டது?கூழாங்
89.எல்லா தபால் தலைகளும் பகுதிகள் கொண்ட சதுரமாகவே இருக்கும்சரியா?தவறா?தவறு
90.மொரீசியஸ் நாட்டில் உள்ள மக்களில் பலர் இந்திய வம்சாவளியினர்சரியா?தவறா?சரி
91.இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்று அழக்கப்படுபவர்?சகுந்தலா தேவி
92.மூன்று வயதில் 10 கி.மீ. நீந்தி சாதனை படைத்த தமிழக சிறுமி?யாமினி
93.ஒரே குடும்பத்தில் நான்கு பேர் நோபல் பரிசு பெற்ற குடும்பம்?ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரி கியூரி அம்மையாரின் குடும்பம்
94.டெஸ்ட் போட்டியில் தனது முதல் மூன்று ஆட்டத்திலும் சதம் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்?முகம்மது அசாருதீன்
95.ஏவுகணையைக் கண்டுபிடித்தவர்?வெர்னர் வான் பிரவுன்
96.எந்திர பீரங்கியைக் கண்டுபிடித்தவர்?ஜேம்ஸ் பக்கிள்
97.நீர் வாயுக்குண்டுவைக் கண்டுபிடித்தவர்?எட்வர்ட் டெய்லர்
98.அணுகுண்டுவைக் கண்டுபிடித்தவர்?ஜே. ராபர்ட் ஓபன் ஹெய்மர்
99.துப்பாக்கியைக் கண்டுபிடித்தவர்?பி.வான்மாஸர்
100.பாரசூட்டினைக் கண்டுபிடித்தவர்?ஏ.ஜே.கார்னரின்
101.இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் யார்?இளவரசர் பிலிப்
102.சயீக் ரஷீத் பாகிஸ்தானின் எந்தக் கட்சித் தலைவர்?அவாமி முஸ்லிம் லீக்
103.2006 முதல் 2008 வரை சயீக் ரஷீத் பாகிஸ்தானின் எந்த மந்திரியாக இருந்தார்?ரெயில்வே மந்திரி
104.பாகிஸ்தானின் முன்னாள் மந்திரி சயீக் ரஷீத் எந்த தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தார்?லஸ்கர்-இ-தொய்பா
105.இந்திய சினிமாவின் முதல் பேசும் படம்?ஆலம் ஆரா (1931)
106.செஞ்சிக் கோட்டை ______________________ துறையால் பாடுகாக்கப்படுகிறது?தொல் பொருள் ஆய்வுத் துறை
107.புகைப்பிடித்தால் என்ன நோய் வரும்?புற்றுநோய்
108.புகைக்கும் பொருட்கள் எதனால் செய்யப்படுகிறது?புகையிலை
109.காமராசர் பிறந்த ஆண்டு?1903
110.காமராசரின் தந்தை பெயர் என்ன?குமாரசாமி
111.அனைத்து மக்களுக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும். கல்வி தான் வீட்டையும்நாட்டையும் உயர்த்தும் என சட்டம் கொண்டு வந்து செயல்படுத்தியவர் யார்?காமராசர்
112.காமராசர் சிறையில் எத்தனை நாட்கள் கழித்தார்?3000
113.காமராசர் எந்த ஆண்டு தமிழக முதல்வரானார்?1954
114.காமராசரின் பிறந்த நாள் எப்படி கொண்டாடப்படுகிறது?கல்வி வளர்ச்சி நாள்
115.திருச்சி பாரத மிகுமின் நிறுவனம் யார் ஆட்சிக் காலத்தில் உருவானது?காமராசர்
116.“கல்விக் கண் திறந்த வள்ளல்” என்று காமராசரை பாராட்டியது யார்?பெரியார்
117.வட இந்திய செய்தித்தாள்கள் காமராசரை எப்படி போற்றினர்?காலா காந்தி
118.பள்ளியில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்?காமராசர்
119.உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது எது?தீக்கோழி
120.தொலைக்காட்சி எந்த ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது?1930
121.தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் யார்?சுவாரிகன்
122.மாம்பழத்திற்கு புகழ்பெற்ற நகரம்?சேலம்
123.தேனீக்களில் எத்தனை பிரிவுகள் உள்ளன?3 (இராணித் தேனீஆண் தேனீ,வேலைக்காரத் தேனீ)
124.தேனீக்கள் தங்கள் கூட்டை எங்கே அமைத்துக் கொள்ளும்?மலைப் பொந்து
125.வேலைக்காரத் தேனீக்களின் வேலை என்ன?தேன் எடுத்தல்
126.தேன் கூட்டில் மற்றொரு தேனீ தோன்றினால் என்ன நிகழும்?வேறு கூடு கட்டும்
127.மனிதர்களால் நேரடியாக செய்ய இயலாத பல கடினமான செயல்களை எளிதாகவும்சரியாகவும் ______________ செய்யும்?ரோபோ
128.நம் நாட்டில் ரோபோக்களின் பயன்பாடு ________________?பெருமளவில் இல்லை
129.செஞ்சிக் கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது?விழுப்புரம்
130.புவியில் காணப்படும் நீரில் கடல் நீரின் அளவு?97.3%
131.1984-ல் மத்திய பிரதேசத்தில் நச்சு வாயு தாக்கிய நகரம்?போபால்
132.வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?1972
133.எந்த ஒலிம்பிக் போட்டியில் அதிக அளவிலான வீரர்கள் கலந்து கொண்டனர்?2000 (சிட்னி) 10,651 வீரர்கள்
134.பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற இந்தியர்?அமர்த்தியா சென்
135.பொருளாதார அடிப்படை வளர்ச்சி என்பது?உற்பத்திநுகர்ச்சிபகிர்வு
136.போக்குவரத்து மற்றும் தொழில்கள் என ஒரு கருத்தினை மையமாகக் கொண்டு வரையப்படும் படங்கள் ___________________ படங்கள் எனப்படும்?கருத்துசார்
137.”அவணி சிம்மன்” என்றும் உலகின் சிங்கம்” எனவும் புகழப்பட்டவர்?சிம்ம விஷ்ணு
138.கார் படை மேகங்களானது __________________மேகங்களாகும்?செங்குத்தான
139.அமெரிக்க ஐக்கிய நாட்டின் வெப்ப தல காற்றின் பெயர்?சின்னூக்
140.யோகா முறையின் தந்தை என்றழைக்கப்படுபவர்?பதஞ்சலி முனிவர்
141.தன்னுடைய எடையைப் போல் இருபது மடங்கு எடையைத் தூக்கும் ஆற்றல் மிக்க உயிரினம்?எறும்பு
142.உலகிலேயே பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?இந்தியா
143.தீக்குச்சி தயாரிக்கப் பயன்படும் மரம்?பைன்
144.உலக தண்ணீர் தினமாகக் கொண்டாடப்படும் நாள்?மார்ச் 22
145.முதுமலை சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா அமைந்துள்ள மாவட்டம்?நீலகிரி
146.இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம்?ராஜஸ்தான்
147.சூறைக்காற்றினை அமெரிக்க ஐக்கிய நாட்டில் _____________ என அழைக்கின்றனர்?டுவிஸ்டர்
148.உலகில் அதிக அளவு சூரிய ஆற்றலை உற்பத்தி செய்யும் நாடு?ஜெர்மனி
149.தமிழ்நாட்டில் ________________ என்னும் இடத்தில் பழுப்பு நிலக்கரி அதிக அளவில் கிடைக்கிறது?நெய்வேலி
150.சீனாவில் உள்ள யாங்டிசி ஆற்றின் குறுக்கே முப்பள்ளத்தாக்கு அணையில்_____________ மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது?நீர் மின்சக்தி
151.தங்க கழுத்துப் பட்டை பணியாளர்கள் என அழைக்கப்படுபவர்?ஆலோசனை வழங்குபவர்
152.”ஜாரவாஸ்” எனப்படும் தொன் முதுமக்கள் காணப்படும் இடம்?அந்தமான் நிக்கோபார்
153.____________ ஆம் ஆண்டை ஐ.நா. சபை உலக பெண்கள் ஆண்டாக அறிவித்துள்ளது?1978
154.பணத்தில் செலவழிக்கப்படாமல் இருக்கும் ஒரு பகுதியே ____________ ஆகும்?சேமிப்பு
155.__________ தான் இடையீட்டுக் கருவியாக செயல்படுகிறது?பணம்
156.ஆண்டுதோறும் _____________ மாதத்தின் முதல் வாரம் சாலைப் பாதுகாப்பு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது?ஜனவரி
157.கணிப்பொறி மொழியைக் கண்டுபிடித்தவர்?கிரேஸ் கோப்பர்
158.இந்தியாவில் உள்ள மிகப்பெரிய உப்பு நீரைக் குடிநீராக்கும் திட்டம் அமைந்துள்ள இடம்?மீஞ்சூர்
159.போலந்து நாட்டின் தலைநகர்?வார்சா
160.கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரிய போட்டி?விம்பிள்டன்
161.ரபேல் நடால் எந்த நாட்டைச் சார்ந்தவர்?ஸ்பெயின்
162.லுகாஸ் ரோசல் எந்த நாட்டைச் சார்ந்தவர்?செக் குடியரசு
163.மிகப் பழமையான அண்ணா பல்கலைக்கழகம் எங்குள்ளது?கிண்டி
164.எந்த வரியிலிருந்து உள்ளாட்சி நிர்வாகத்திற்கு வருமானம் வருவதில்லை?மதிப்புக் கூட்டப்பட்ட வரி
165.ஊர் மன்றக் கூட்டங்கள் ஆண்டுக்கு எத்தனை முறை கூடுகிறது?4
166.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த மாவட்டம் எது?புதுக்கோட்டை
167.சந்திரனின் மறுபக்கத்தை லூனா 3” முதன்முதலில் புகைப்படம் எடுத்த வருடம்?1959
168.கோடைக்காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் நாடு எது?ஆஸ்திரேலியா
169.சூறாவளிகள் அதிகமாக உருவாகும் பெருங்கடல்?அட்லாண்டிக்
170.உலகின் நீண்ட கடற்கரை எது?மியாமி
171.தேசிய கீதம் முதன்முறையாக பாடப்பட்ட தினம்?டிசம்பர் 27 1911
172.உலகிலேயே அதிக அளவு அணுசக்தியைப் பயன்படுத்தும் நாடு?பிரான்ஸ்
173.ஐந்தாம் நிலைத் தொழில் புரிவோர் யார்?திட்டம் வகுப்போர்
174.உலகின் மிக ஆழமான மரியானா அகழி அமைந்துள்ள பெருங்கடல்?பசிபிக்
175.மிக அதிக உயரத்தில் உள்ள நகரத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி எது?மெக்ஸிகோ (7349 அடி)
176.விம்பிள்டன் பட்டத்தை முறை வென்றவர் யார்?ரோஜர் பெடரர்
177.ரோஜர் பெடரர் எந்த நாட்டைச் சார்ந்தவர்?சுவிட்சர்லாந்து
178.உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் யார்?யோகன் பிளேக் (100 மீட்டரை 9.75விநாடிகளில் கடந்தார்)
179.எந்த நாடுகளில் மிகப்பரந்த பாக்ஸைட் கனிம இருப்புகள் காணப்படுகின்றன?ஆஸ்திரேலியாபிரேசில் மற்றும் ஜமைக்கா
180.உலகின் மிகப்பெரிய உள்நாட்டு மீன்பிடி ஏரி எது?டோன் லேசாப்
181.மியான்மர் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாடு எது?பர்மா
182.முல்லைப் பெரியாறு அணையினைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் யார்?பென்னி குவிக்
183.”சுதர்மம்” என்றால் என்ன?கடமை உணர்வு
184.மருத்துவர்கள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?ஜூலை 1
185.மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் நிலதங்கா கிராமத்தில் நடைபெறும் திருவிழா?ஹீல்
186.மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் நிலதங்கா கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின பெண்களின் பெயர்?சந்தால்
187.மத்திய பிரதேச மாநிலத்தின் எல்லை மாநிலங்கள்?சட்டீஸ்கர்மஹாராஷ்டிரா,குஜராத்ராஜஸ்தான்
188.மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் என்ன?போபால்
189.மத்திய பிரதேச மாநிலம் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?1956
190.மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை?230
191.மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை?29
192.மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த ராஜ்யசபா தொகுதிகளின் எண்ணிக்கை?11
193.மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை?50
194.மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில மொழி?ஹிந்தி
195.மத்திய பிரதேச மாநிலத்தில் பாயும் முக்கிய நதிகள்?நர்மதாதப்திமகாநதி
196.மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில விலங்கு?சதுப்பு நில மான்
197.மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில பறவை?பாரடைஸ் பிளைகேட்ச்சர்
198.அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா எந்த மாகாணத்தைச் சார்ந்தவர்?இல்லினாய்ஸ்
199.இந்தியாவின் முதல் ராணுவ அமைச்சர் யார்?என்.கோபாலசாமி ஐயங்கார்
200.இருதய மாற்று அறுவை சிகிச்சையை இந்தியாவில் முதன்முதலில் மேற்கொண்டவர் யார்?டாக்டர். வேணுகோபால்
201.இந்தியாவின் முதல் பெண் கவர்னர் யார்?சரோஜினி நாயுடு
202.எவரெஸ்ட் சிகரம் மீது ஏறிய முதல் பெண் யார்?பச்சேந்திரி பால்
203.சண்டிகர் நகரை நிர்மாணித்தவர் யார்?லி கொர்புசியர்
204.இந்தியாவில் முதல் ஆங்கில நாளிதழை துவக்கியவர் யார்?ஜே.ஏ.ஹிக்கி
205.இந்தியாவில் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் யார்?ஜோதி பாசு
206.இந்தியாவுக்கு வந்த முதல் அமெரிக்க அதிபர் யார்?ஐசென் ஹோவர்
207.இந்தியாவின் முதல் பெண் அமைச்சர் யார்?ராஜ்குமாரி அம்ரித் கவுர்
208.இந்திய-பாகிஸ்தான் எல்லை?வாகா
209.அமெரிக்காவின் நாசா” வில் இருந்து விண்வெளி ஆய்வு மையத்திற்கு பொருட்கள் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் விமானம்?போயிங்
210.அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பெயர்?ஆக்டா
211.கூடங்குளம் அணுமின் நிலையம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?திருநெல்வேலி
212.கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் எரிபொருள்?யுரேனியம்
213.குற்றால அருவி எந்த மாவட்டத்தில் உள்ளது?திருநெல்வேலி
214.பன்னாட்டு விமான நிலையம் மதுரையில் உள்ளது. சரியாதவறா?தவறு
215.நாசிக் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?கோதாவரி
216.வெளிர் கழுத்துப்பட்டை பணியாளர்கள் எனப்படுபவர்?மூன்றாம் நிலை தொழில்புரிவோர்
217.அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்குள்ளது?பாபநாசம்
218.உப்பு அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்?குஜராத்
219.தென்கிழக்கு இரயில்வேயின் தலைமையகம்?பிலாஸ்பூர்
220.சென்னை-திண்டுக்கல் இடையிலான தேசிய நெடுஞ்சாலை?NH45
221.வல்லநாடு சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது?தூத்துக்குடி
222.எதன் உற்பத்தியில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது?லிக்னைட்
223.தமிழகத்தில் தோல் தொழிற்சாலைகள் இல்லாத நகரம்?மதுரை
224.விட்டிகல்சர் என்பது?திராட்சை வளர்த்தல்
225.”தெற்காசியாவின் டெட்ராய்ட்” என்று அழைக்கப்படுவது?சென்னை
226.கிரிக்கெட் விளையாட்டில் ஆடுகளம் (பிட்ச்சின்) நீளம் என்ன?22 கஜம்
227.ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய மஞ்சள் சந்தை எங்குள்ளது?ஈரோடு
228.இந்தியக் குடியரசுத் தலைவர்களில் முதலில் பாரத ரத்னா விருது பெற்றவர்?ராதா கிருஷ்ணன்
229.தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரி பெறப்படும் இடம்?ஜார்கண்ட்
230.இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை மையம் எங்கே நிறுவப்பட்டுள்ளது?ஐதராபாத்
231.தமிழகத்தில் ஐந்தருவி எங்கு உள்ளது?குற்றாலம்
232.பி.எஸ்.என்.எல்-விரிவாக்கம் என்ன?பாரத் சன்சார் நிகாம் லிமிடெட்
233.ஒலிம்பிக் போட்டியில் மாரத்தான் ஓட்டியின் தூரம் எவ்வளவு?42.19 செ.மீ.
234.யுனெஸ்கோ அறிவித்துள்ள உலகின் பாரம்பரியச் சின்னங்கள்?ஜெர்மனியில் உள்ள ஒபேரா ஹவுஸ்இயேசு கிறிஸ்து பிறந்த இடத்தில் உள்ள சர்ச் ஆப் நேட்டிவ் தேவாலயம்சீனாவின் செங்ஜியாவ் பாசில் வயல்
235.ஜப்பானில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பயங்கர பூகம்பம் மற்றும் சுனாமி காரணமாக எந்த அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டது?புகுஷிமா
236.ஜப்பானில் அமெரிக்கா குண்டு வீசிய இடங்கள்?ஹிரோசிமா மற்றும் நாகசாகி
237.ஜப்பானில் அமெரிக்கா வீசிய அணுகுண்டில் இறந்தவர்கள்?இரண்டு லட்சம் பேர்
238.ஜப்பானியர் வணங்கும் பறவை?கொக்கு
239.ஹிரோசிமா நகரில் உள்ள குழந்தைகள் அமைதி நினைவாலயம் யாருக்காக கட்டினார்கள்?ஜப்பான் சிறுமி சடகோ சகாகி
240.காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையை ஜப்பானியர் எவ்வாறு அழைப்பர்?ஓரிகாமி
241.இசை சம்பந்தப்பட்ட காரின் பெயர்?ஆல்ட்டோ
242.“லாஸ் ஏஞ்சல்ஸ்” நகரம் எந்த கடற்கரையில் உள்ளது?பசிபிக் பெருங்கடல்
243.”மஸ்கட்” UAE – ல் இல்லாத நாடு ஆகும். சரியாதவறா?சரி
244.உலகிலேயே மிக வேகமாக இயங்கும் பாம்பு?கறுப்பு மாம்போ (ஆப்பிரிக்கா)
245.1988-ல் வெளிவந்த மூன்வாக்கர்” திரைப்படம் யாரைப் பற்றியது?மைக்கேல் ஜாக்ஸன்
246.தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம்?காளிதாஸ்
247.தேசிய ஆற்றல் சேமிப்பு நாள்?பிப்ரவரி-18
248.நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே அறியும் விலங்கு?நாய்
249.எலியின் கேட்கும் திறன் மனிதனை விட எத்தனை மடங்கு அதிகம்?60
250.பால் உற்பத்தியில் உலகிலேயே முதல் இடத்தில் உள்ள நாடு?இந்தியா
251.இந்தியாவில் முதன் முதலில் எங்கு தொலைக்காட்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது?டில்லி
252.தேசிய ரசாயன ஆய்வுக்கூடம் அமைந்துள்ள இடம்?புனே
253.மான்கனீசு அதிகமாக காணப்படும் மாநிலம்?ஒரிசா
254.அக்மார்க் நிறுவனம் அமைந்துள்ள இடம்?விருதுநகர்
255.எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?1998
256.கழிவுத் தாளை (காகிதம்) எத்தனை சதவீதம் மறுசுழற்சியின் மூலம் மீண்டும் பயன்படுத்தலாம்?44%
257.சீனாவின் ஷீஜியாங் மாநிலத்தில் உள்ள துறைமுகம்?ஹவுசான்
258.எந்த கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி ஆகும்?மொத்த ஓட்டில் சதவீதமும், 2எம்.எல்.ஏ.க்களையும் பெற்றிருக்க வேண்டும்
259.இந்தியாவின் கடற்கரையின் மொத்த நீளம்?7516 கி.மீ.
260.மனிதன் சராசரியாக ஒவ்வொரு நாளும் எத்தனை முறை சுவாசிக்கிறான்?2200முறை
261.கார்பன் புகை அதிக அளவில் வெளியேற்றும் நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?5 வது இடம்
262.இந்தியாவில் எவ்வளவு டன்கள் மின்னியல் கழிவுகள் உற்பத்தியாகின்றன?3,80,000 டன்
263.இந்தியாவின் மான்செஸ்டர்” என அழைக்கப்படும் நகரம் எது?மும்பை
264.உலகின் பருத்தி ஆடை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?மூன்றாமிடம்
265.தமிழகத்தில் எங்கு எஃகு நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது?சேலம்
266.ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதி முதன்முதலில் எப்போது வெளியிடப்பட்டது?1933-ல் லண்டனில் வெளியிடப்பட்டது
267.ரியோ உச்சி மாநாட்டின் வேறு பெயர் என்ன?புவி உச்சி மாநாடு
268.ஹீப்ளி எந்த மாநிலத்திலுள்ளது?கர்நாடகா
269.அக்டோபர் முதல் வாரத்தை அரசு ______________ வாரமாக கொண்டாடி வருகிறது?வனவிலங்கு
270.சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் யார்?ஆர்.கே. சண்முகம் செட்டியார்
271.கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்?கன்னியாகுமரி
272.காந்திகிராமிய பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தர் யார்?டாக்டர்.ராமச்சந்திரன்
273.தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் தலைவர் யார்?முதல்வர்
274.தமிழகத்தின் முதல் பெண் கமாண்டோவின் பெயர் என்ன?காளியம்மாள்
275.ஆங்கிலேயர் காலத்தில் போலீஸ் கமிஷனராக இருந்த ஒரே இந்தியர் யார்?பராங்குசம் நாயுடு
276.தமிழகத்தில் பிர்லா கோளரங்கம் எந்த மாவட்டத்தில் உள்ளது?சென்னை
277.தமிழகத்தில் குடுமியான் மலைக் கல்வெட்டுக்கள் எந்த மாவட்டத்தில் உள்ளன?புதுக்கோட்டை
278.தமிழகத்தில் முதன்முதலில் எங்கு அச்சுக் கூடங்கள் அமைக்கப்பட்டன?சிவகாசி
279.கணிதமேதை ராமானுஜம் பிறந்த ஊர்?கும்பகோணம்
280.ஆசியாவிலேயே அதிவேகமாக காற்று வீசும் பகுதி எது?ஆரல்வாய் மொழி
281.தமிழகத்தில் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் எங்குள்ளது?காரைக்குடி
282.தமிழக அரசின் தொல்லியல் அகல்வாய்வகம் எங்குள்ளது?வேலூர்
283.மருதுபாண்டியர் தூக்கிலடப்பட்ட இடம் எது?கொல்லங்குடி
284.ரமண மகரிஷி பிறந்த இடம்?திருச்சுழி
285.போரிஸ்பெக்கர் எதனுடன் தொடர்புடையவர்?டென்னிஸ்
286.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்காக விளையாடிய கிரிக்கெட் ஆட்டக்காரர்?பட்டோடி நவாப்
287.ஐந்து முதல்வர்களுடன் நடித்த தமிழ்த் திரைப்பட நடிகை?மனோரமா
288.தேசிய ஒருமைப்பாடு எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?நவம்பர்-19
289.தேசிய அறிவியல் தினம் கொணாடாடப்படும் நாள்?பிப்ரவரி-28
290.அகிலனின் ஞானபீட விருது பெற்ற தமிழ் நூல்?சித்திரப்பாவை
291.ஒடிசா அரசின் கோனார்க் சம்மான் விருது பெற்ற தமிழ் கலைஞர்?பத்மா சுப்ரமணியம்
292.ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள்?செப்டம்பர் 5
293.1992-ம் ஆண்டு பாரதரத்னா விருது பெற்ற தொழிலதிபர்?ஜே.ஆர்.டி.டாட்டா
294.சார்க் அமைப்பின் முதல் மாநாடு நடைப்பெற்ற இடம்?டாக்கா
295.சலீம் அலி சுற்றுச் சூழல் இயல் கல்லூரி எங்கு உள்ளது?பாண்டிச்சேரி
296.பீல்டு மார்சல் பட்டம் பெற்ற முதல் இந்தியர்?மானக்‌ஷா
297.உருக்காலை உள்ள இடங்கள்?பொகாரோதுர்காபூர்ரூர்கேலா
298.இந்தியாவின் மிகப்பெரிய அரசு நிறுவனம்?இந்தியன் ரயில்வே
299.மத்திய தோல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?சென்னை
300.ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்?4 ஆண்டுகளுக்கு ஒரு முறை
301.முதல் ஒலிம்பிக் போட்டி எப்போது எங்கு நடைபெற்றது?கி.மு.776, கிரீஸ் நகரின் ஒலிம்பியா
302.நவீன ஒலிம்பிக் போட்டிகள் எந்த நூற்றாண்டிலிருந்து நடந்து வருகிறது?19 ஆம் நூற்றாண்டு
303.ஒலிம்பிக்ஸின் பிரிவுகள் எத்தனை?4 (சம்மர் ஒலிம்பிக்ஸ்விண்டர் ஒலிம்பிக்ஸ்பாராலிம்பிக் ஒலிம்பிக்ஸ்யூத் ஒலிம்பிக்ஸ்)
304.பழங்கால ஒலிம்பிக்கில் யார் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்?ஆண்கள்
305.இந்தியாவில் பொற்கோயில் எங்குள்ளது?அமிர்தசரஸ் (பஞ்சாப்)
306.தமிழகத்தில் பொற்கோயில் எங்குள்ளது?வேலூர்
307.காற்றாலைகள் தமிழகத்தில் எங்குள்ளன?கயத்தாறு
308.நூடுல்ஸ் தமிழ்நாட்டு உணவு வகை இல்லை. சரியாதவறா?சரி
309.இந்தியாவின் செயற்கை கோள்?INSAT
310.சந்திராயன் அனுப்பப்பட்டதின் அடிப்படை நோக்கம்?நிலவை ஆய்வு செய்ய
311.நமது நாட்டில் ராக்கெட் ஏவுதளம் எங்குள்ளது?ஸ்ரீஹரிகோட்டா
312.இலங்கையின் தலைநகர்?கொழும்பு
313.இங்கிலாந்தின் தலைநகர்?லண்டன்
314.ஜப்பானின் தலைநகர்?டோக்கியோ
315.பாகிஸ்தானின் தலைநகர்?இஸ்லாமாபாத்
316.ஆஸ்திரேலியாவின் தலைநகர்?கான்பெரா
317.தென்னாப்பிரிக்காவின் தலைநகர்?ஜோகன்னஸ்பர்க்
318.தென்னாப்பிரிக்காவின் முதல் அதிபர்?நெல்சன் மண்டேலா
319.பிரிஸ்பேன் நகர் எந்த நாட்டில் உள்ளது?ஆஸ்திரேலியா
320.குயின்ஸ்லேண்ட் நீதிமன்றம் எந்த நாட்டில் உள்ளது?ஆஸ்திரேலியா
321.எகிப்து நாட்டின் தலைநகர்?கெய்ரோ
322.ஜே.பி.எல்-விரிவாக்கம்?ஜெய்ப்பூர் பிரிமியர் லீக்
323.ராஜஸ்தானின் தலைநகர்?ஜெய்ப்பூர்
324.பிரான்ஸ் நாட்டின் தலைநகர்?பாரிஸ்
325.மலேசியாவின் தலைநகர்?கோலாலம்பூர்
326.காஷ்மீரின் கடைசி மஹாராஜா?ஹரிசிங்
327.ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் யார்?இயான் போத்தம்
328.இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் பிறந்தநாள் மற்றும் தற்போதைய வயது?ஜூலை 7, வயது 31
329.இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் சொந்த ஊர்?ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகரான ராஞ்சி
330.டூர் டு பிரான்ஸ் எனப்படும் சைக்கிள் பந்தயத்தின் தூரம் எவ்வளவு?207 கி.மீ
331.மெட்ஸ் என்ற இடம் எங்குள்ளது?பிரான்ஸ்
332.உலகப் புகழ்பெற்ற எருது விரட்டும் திருவிழா எங்கு நடைபெறும்?ஸ்பெயின் நாட்டின் பாம்லோனா நகரில்
333.ரஷ்யாவின் தலைநகரம்?மாஸ்கோ
334.பட்டியாலா எந்த மாநிலத்தில் உள்ளது?பஞ்சாப்
335.வ.உ.சி. அவர்கள் பிறந்த ஊர் எது?ஒட்டப்பிடாரம்
336.உலகிலேயே அதிக அளவிலான படங்கள் தயாரிக்கும் நாடு எது?இந்தியா
337.கண்ணாடிக்கு புகழ் பெற்ற நாடு எது?பெல்ஜியம்
338.பெண்களின் சமூக நலத்தில் பங்கு கொண்டால் தான் நாடு முன்னேறும் என்று கூறியவர்?மகாத்மா காந்தி
339.மிக உயரமான கட்டிடம் உள்ள நாடு எது?துபாய்
340.அமெரிக்காவில் மிக அதிக எண்ணிக்கையிலான உயிர்கள் பலியான நாள் எது?11, செப்டம்பர் 2001, இரட்டை கோபுரம் இடிப்பு
341.தமிழ்நாட்டில் அதிக அளவிலான முட்டை உற்பத்தி செய்யும் மாவட்டம்?நாமக்கல்
342.உலகிலேயே மிக அதிகமான மக்கள் வாழும் நகரம்?ஷாங்காய்
343.தேனி வளர்ப்பை எவ்வாறு கூறுவர்?எபிகல்சர்
344.உலகின் மிகப்பெரிய வைரச் சுரங்கம் எங்குள்ளது?தென் ஆப்பிரிக்கா
345.தென் ஆசியாவின் மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது?சென்னை
346.இந்தியாவின் முதல் பேசும் படம் என்ன?ஆலம் ஆரா (1931)
347.இந்தியாவின் முதல் சோதனைக் குழாய் குழந்தை யார்?குழந்தை: ஹர்ஷா,வளர்த்தவர்: இந்திரா
348.டோக்கியோவின் அன்றைய பெயர் என்ன?ஏடோ
349.சீனாவின் அன்றைய பெயர் என்ன?கத்தே
350.முதல் இஸ்லாமிய பெண் பிரதமர் யார்?பெனாசீர் புட்டோ
351.தமிழில் வெளிவந்த முதல் 70mm படம் எது?மாவீரன் (ரஜினிகாந்த் நடித்தது)
352.மால்குடி என்பது?கற்பனை ஊர்
353.காஷ்மீர் என்பது ஒரு இந்திய மாநிலத்தின் பெயர். சரியாதவறா?தவறு (மாநிலத்தின் பெயர் ஜம்மு & காஷ்மீர்)
354.கோஹினூர் வைரம் கோலார் தங்க சுரங்கத்தில் எடுக்கப்பட்டது. சரியா?தவறா?தவறு
355.கோஹினூர் வைரம் எந்த தங்க சுரங்கத்தில் எடுக்கப்பட்டது?கோல்கொண்டா (ஆந்திரா)
356.பாரசீகர்கள் எதை கடவுளாக வழிபட்டனர்?நெருப்பு
357.எந்த கண்டத்தில் கங்காருபனிக்கரடி உள்ளது?ஆஸ்திரேலியா
358.பி.எஸ்.வீரப்பா சபாஸ் சரியான போட்டி” என்று எந்த படத்தில் கூறினார்?வஞ்சிக் கோட்டை வாலிபன்
359.குதிரை எதற்கு வாயைத் திறக்கும் என்று தமிழ் பழமொழி கூறுகிறது?கொள்ளு திண்ண
360.கிருஷ்ண பகவானின் பால்ய நண்பன் பெயரைக் கொண்ட திரைப்படம் எது?குசேலன்
361.பெருந்தலைவர் காமராஜர் பிறந்த ஊரின் தற்போதைய பெயர் என்ன?விருது நகர் (விருதுப் பட்டி)
362.உயிர் உள்ளவரை எலிக்கு பற்கள் வளர்ந்து கொண்டே இருக்கும். சரியா?தவறா?சரி
363.M. L வசந்த குமாரி என்ற பெயரில் உள்ள எதைக் குறிக்கும்?மதராஸ்
364.நோய் குணமாவதற்கு மனதிற்கு முக்கிய பங்கு உண்டு. சரியாதவறா?சரி
365.சச்சின் டெண்டுல்கரின் அப்பா பெயர்?ரமேஷ் டெண்டுல்கர் (மராட்டிய எழுத்தாளர்)
366.திண்டிவனம் முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?தின்திருணிவனம்
367.விருத்தாசலத்தின் அன்றைய பெயர் என்ன?முதுகுன்றம்
368.பியானோ சட்டங்களின் எண்ணிக்கை?88
369.ஸ்நூக்கர் விளையாட்டில் எத்தனை பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன?22
370.சீட்டு கட்டில் மீசை இல்லாத ராஜா?ஹார்ட்டின் ராஜா
371.அதிகமான முறை அகாடமி திரைப்பட விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்?வால்ட் டிஸ்னி-59 முறைஜான் வில்லியம்ஸ்-47
372.ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் இசையமைப்பாளர்?ஜான் வில்லியம்ஸ்
373.1952 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு எந்த நாட்டினர் ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தனர்?இஸ்ரேல்
374.பியானோவில் கீகள் எந்த வண்ணத்தில் இருக்கும்?கறுப்புவெள்ளை
375.ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நீல நிற உடை அணியும் அணி?இந்தியா
376.குழந்தைகளின் மன வளர்ச்சிக்குத் தகுந்தபடி பாடம் சொல்லிக் கொடுக்கும் முறையை உருவாக்கிய இத்தாலியர் யார்?மரியா மாண்டிச்சேரி
377.அல்சைமர் என்ற நோய் உடலின் எந்த பகுதியைப் பாதிக்கும்?மூளை
378.எந்த மாவட்டத்தில் NLC (நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன்) உள்ளது?கடலூர்
379.2011 ஆம் ஆண்டு நிலவரப்படி காபி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?பிரேசில்
380.மோகன்தாஸ் காந்திக்கு மகாத்மா” என்ற பட்டம் அளித்த்தாக கூறப்படுபவர்?ரவீந்திரநாத் தாகூர்
381.கார்டெல் என்றால் என்ன?நாட்டின் முன்னணி நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து,திறனுக்கும் குறைவாக உற்பத்தி செய்துமார்க்கெட்டில் நிரந்தர தேவையை ஏற்படுத்திஅதன் மூலம் விலையை இஷ்டத்துக்கு உயர்த்தி கொள்ளை லாபம் பார்ப்பது.
382.கார்டெல் அமைத்து செயல்படுவதால் விலை உயரும் பொருட்கள் வரிசையில் சர்வதேச அளவில் முன்னணி வகிப்பவை?தங்கம்கச்சா எண்ணை
383.அமெரிக்காவுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் சில பொருட்கள்?அலங்கார மீன்சணல்பாசுமதி அரிசி
384.உலகளவில் கோலோச்சும் ரீடெய்ல் ஜாம்பவான்கள்?வால்மார்ட்டெஸ்கோ,கேரிபோர்மெட்ரோசெவன்ஏயான்யாமாடா டென்கிசுனிங்ரிலையன்ஸ் ரீடெய்ல் (இந்தியா)
385.ஏற்றுமதியில் LIBOR என்றால் என்ன?LONDON INTER BANK OFFER RATE
386.பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் எத்தனையாவது முறையாக முதல்வர் ஆகியுள்ளார்?5
387.தாமிர தாது அதிகம் உள்ள மாநிலம்?ராஜஸ்தான்
388.எப்போது முதல் இந்தியாவில் பேப்பர் கரன்சி முறை செயல்படுகிறது?1862
389.இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார்?டாக்டர்.ராஜேந்திர பிரசாத்
390.கே.ஆர்.எஸ்கபினி மற்றும் ஹேமாவதி அணைகள் எந்த மாநிலத்தில் உள்ளது?கர்நாடகா
391.ஒலிம்பிக் போட்டியின் போது ஹாக்கியில் கடைசியாக இந்தியா எப்போது தங்கம் வென்றிருந்தது?1980 (மாஸ்கோ) – 32 ஆண்டுகளுக்கு முன்பு
392.IOC ன் விரிவாக்கம்?International Olympic Committee
393.எந்த வருடம் முதல் பெண்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றனர்?1908
394.கலைவாணர் பிறந்த ஊர்?ஒழுகினசேரி
395.சிங்கப்பூரின் தலைநகர்?சிங்கப்பூர் சிட்டி
396.தமிழ்நாடு அரசு சின்னம்?ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம்இரண்டு இந்திய தேசியக் கொடிகள்வாய்மையே வெல்லும்
397.கேரளா அரசு சின்னம்?இரண்டு யானைகள்மத்தியில் சங்குஅசோக சக்கரம்
398.கர்நாடகா அரசு சின்னம்?மத்தியில் இரட்டைத் தலைகளுடன் தும்பிக்கையுள்ள இரண்டு சிங்கம்சத்யமேவ ஜெயதே வாசகம்
399.ஆந்திரா அரசு சின்னம்?பூர்ண கும்பம்சத்யமேவ ஜெயதே வாசகம்
400.ஆந்திராவில் மலிச்ச பாலம்” என்று பாட்டு பாடி விளையாடும் விளையாட்டு?கபடி
401.கபடியில் ஒரு அணியில் எத்தனை ஆட்டக்காரர்கள் இருப்பார்கள்?12
402.கபடியில் எத்தனை வீரர்கள் களத்தில் இருப்பார்கள்?7
403.மடிக்கணிணி யாருடைய சிந்தனையில் உருவானது?ஆலம் கே என்பவரின் டைனாபுக்
404.முதன்முதலில் வணிக நோக்கில் வெளிவந்த மடிக்கணிணி?ஒஸ்போர்ன் (1981)
405.மடிகணிணிகளின் எடை?2.3 கி.கி முதல் 3.2 கி.கி வரை
406.மடிக்கணிணியின் திரை அளவு?35 செ.மீ முதல் 39 செ.மீ வரை
407.வெள்ளை யானைகளின் நிலம்?தாய்லாந்து
408.கடலின் ஆபரணங்கள்?மேற்கிந்திய தீவு
409.ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம்?சுவிட்சர்லாந்து
410.நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாடு?நார்வே
411.அரபிக் கடலின் அரசி?கொச்சி
412.அதிகாலை அமைதி நாடு?கொரியா
413.இந்தியாவின் சுவிட்சர்லாந்து?காஷ்மீர்
414.புனித பூமி?பாலஸ்தீனம்
415.ஆஸ்திரேலியாவின் முன் கதவு?டார்வின் நகரம்
416.மரகதத் தீவு?அயர்லாந்து
417.தடுக்கப்பட்ட நகரம்?லாசா
418.பண்பாடுகளின் தாய்நகரம்?பாரிஸ்
419.தண்ணீர் தேசம்மிதவை நகரம்?வெனிஸ்
420.ஏரிகளின் நகரம்?ஸ்காட்லாந்து
421.தீவுகளின் நகரம்?மும்பை
422.வானளாவிய நகரம்?நியூயார்க்
423.ஆக்ராவின் அடையாளம்?தாஜ்மகால்
424.தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் பைக்காரா நீர்வீழ்ச்சிஅமைந்துள்ளது?நீலகிரி
425.புவியியல் மையம் எனப்படும் ஜீரோ மைல் பாயிண்ட்” இந்தியாவில் எந்த நகரத்தில் அமைந்துள்ளது?நாக்பூர்
426.பிரபல அமெரிக்க சினிமேட்டோகிராஃபர்ஸ் சொஸைட்டியில் (ASC)உறுப்பினர் ஆகும்படி அழைக்கப்பட்ட முதல் இந்தியர் யார்?சந்தோஷ் சிவன்
427.முதலாம் உலகப் போரில் உயிர்த் தியாகம் செய்த 70,000 இந்திய வீரர்களை கெளரவிக்க எழுப்பப்பட்டது?இந்தியா கேட்
428.K.பாலச்சந்தர் எந்த படங்களுக்காக தமிழ்நாட்டின் மாநில விருதைப் பெற்றுள்ளார்?புதுப்புது அர்த்தங்கள்வறுமையின் நிறம் சிவப்பு
429.ஆரம்ப காலத்தில் கடம்ப மரங்கள் நிறந்த காடாக இருந்ததாகக் கருதப்பட்டதால் கடம்பவனம்” என அழைக்கப்பட்ட நகரம் எது?மதுரை
430.ரஜினிகாந்த் ஞாபகமறதி பேராசிரியராக நடித்துள்ள தமிழ்த் திரைப்படம்?தர்மத்தின் தலைவன்
431.லஷ்மிகாந்த்-பியாரிலால் இசையமைத்த தமிழ்த் திரைப்படம்?உயிரே உனக்காக
432.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் எந்த நாட்டைச் சார்ந்தவர்?நியூசிலாந்து (ஸ்டீபன் ஃப்ளெமிங்க்)
433.அகர்தலா இந்தியாவின் எந்த மாநிலத் தலைநகரம்?திரிபுரா
434.கர்நாடக இசையில் மொத்தம் எத்தனை மேளகர்த்தா ராகங்கள் உள்ளன?72
435.ஜெமினி கணேசன் இயக்கிய ஒரே திரைப்படம்?இதய மலர்
436.ஒரு வருடத்தில் 19 படங்களில் நடித்து வெளியான திரைப்படங்கள் யாருடையது?மோகன்
437.எந்த மொழியில் இருந்து பீரோ” என்ற வார்த்தைத் தமிழுக்கு வந்தது?ஃப்ரெஞ்ச்
438.கன்வாரிஸ் என்று அழைக்கப்படுபவர்கள் யார்?சிவ பக்தர்கள்
439.சிரவண மாதத்தின் முதல் திங்கள் கிழமையில் யாருக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்வார்கள்?சிவலிங்கம்
440.ஆங்கில எண் 1-க்கு இணையான தமிழ் எண்?
441.ஆங்கில எண் 2-க்கு இணையான தமிழ் எண்?
442.ஆங்கில எண் 3-க்கு இணையான தமிழ் எண்?
443.ஆங்கில எண் 4-க்கு இணையான தமிழ் எண்?சு
444.ஆங்கில எண் 5-க்கு இணையான தமிழ் எண்?ரு
445.ஆங்கில எண் 6-க்கு இணையான தமிழ் எண்?சா
446.ஆங்கில எண் 7-க்கு இணையான தமிழ் எண்?
447.ஆங்கில எண் 8-க்கு இணையான தமிழ் எண்?
448.ஆங்கில எண் 9-க்கு இணையான தமிழ் எண்?கி
449.ஆங்கில எண் 10-க்கு இணையான தமிழ் எண்?
450.ஒரு ஜதை(ஜோடி) என்றால் என்ன?2 பொருட்கள்
451.1 டஜன் என்றால் என்ன?12 பொருட்கள்
452.1 குரோசு என்றால் என்ன?12 டஜன் (144 பொருட்கள்)
453.1 ஸ்கோர் என்றால் என்ன?20 பொருட்கள்
454.ஒரு வருடத்தில் மொத்தம் எத்தனை நாட்கள்?365 நாட்கள்
455.லீப் வருடத்தில் மொத்தம் எத்தனை நாட்கள்?366 நாட்கள்
456.நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் வருடம்?லீப் வருடம்
457.100 சதுர மீட்டர் என்பது?1 ஆர்
458.100 ஆர் சதுர மீட்டர் என்பது?1 ஹெக்டேர்
459.ரூபாய் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?இந்தியா,பாகிஸ்தான்இலங்கை
460.கியாட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?பர்மா
461.பவுண்ட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?இங்கிலாந்து
462.டாலர் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?அமெரிக்கா,லேசியா
463.யுவான் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?சீனா
464.யூரோ நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?பிரான்ஸ்,ஜெர்மனிபெல்ஜியம்ஆஸ்திரியாகிரீஸ்
465.லைரா நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?துருக்கி,இத்தாலி
466.யென் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?ஜப்பான்
467.ரூபிள் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?ரஷ்யா
468.கிரெளன் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?டென்மார்க்
469.ஃபார்ண்ட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?ஹங்கேரி
470.பெலோ நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?மெக்ஸிகோ
471.குரோனா நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?சுவீடன்
472.உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?ஜூலை 11
473.உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 100 கோடியை எட்டியது?1840
474.உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 200 கோடியை எட்டியது?1927
475.உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 300 கோடியை எட்டியது?1960
476.உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 500 கோடியை எட்டியது?1987
477.உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 600 கோடியை எட்டியது?1999
478.உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 700 கோடியை எட்டியது?2011
479.உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள நாடு?சீனா
480.உலக மக்கள் தொகையில் இரண்டாமிடத்தில் உள்ள நாடு?இந்தியா
481.மக்கள் தொகை கோட்பாட்டை உருவாக்கியவர் யார்?மால்தஸ்
482.இந்தியா மீது சீனா போர் நடத்த தயாராகி வருவதாக எந்த உளவு அமைப்பு எச்சரித்துள்ளது?ரா
483.கல்லணையைக் கட்டியவர் யார்?கரிகால சோழன்
484.தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டியவர்?ராஜராஜ சோழன்
485.நேப்பியர் பூங்கா தமிழகத்தில் எங்குள்ளது?சென்னை
486.அணுகுண்டை விட ஆபத்தானது எது?பிளாஸ்டிக்
487.இந்திய வர்த்தக கூட்டமைப்பின் உலகளாவிய மாநாட்டின் பெயர்?அசோசெம்
488.கணிப்பொறிக்கான மென்பொருளை எழுதியவர்?அடா லவ்லேஸ்
489.தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தியவர்?ஜெகதீஷ் சந்திரபோஸ்
490.நமது நாட்டு மக்களாலும்அரசாலும் கொண்டாடப்படும் விழா?தேசிய விழா
491.ஆசிரியர் தினமாக யாருடைய பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது?டாக்டர்.இராதாகிருஷ்ணன்
492.நர்மதாதபதி ஆறுகள் எந்தக் கடலில் கலக்கின்றன?அரபி
493.தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம்?ஆனைமுடி
494.தமிழ்நாடு என்ற பெயர் என்று சூட்டப்பட்டது?14.01.1969
495.டென்மார்க் நாட்டின் தலைநகர்?கோபன்ஹேகன்
496.”வால்காவில் இருந்து கங்கை வரை” என்ற நூலின் ஆசிரியர் யார்?ராகுலால்
497.NCBH - விரிவாக்கம்?New Centurian Book House
498.தமிழ் திரைப்பட நடிகை த்ரிஷா நடித்த முதல் இந்தி திரைப்படம் எது?கட்டா மீட்டா (அக்‌ஷய் குமார்இயக்கம்: பிரியதர்ஷன்)
499.”தென்மேற்கு பருவக்காற்று” திரைப்படம் எத்தனை தேசிய விருதுகளை வென்றது?2
500.சிவன் அவதரித்த ஸ்தலமான கைலாஷ் மானசரோவர் எந்த இடத்தில் உள்ளது?சீன எல்லையில்
501.கே.எம்.மாம்மென் மாப்பிள்ள எதை உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் எம்.ஆர்.எப் நிறுவனத்தைத் தோற்றுவித்தார்?விளையாட்டு பலூன்கள்
502.போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகர் எது?லிஸ்பன்
503.பி.ஐ.எஸ்-ன் விரிவாக்கம்?பீரோ ஆப் இண்டியன் ஸ்டேண்டர்ட்ஸ்
504.ஹால்மார்க் முத்திரையில் எத்தனை அம்சங்கள் இடம் பெற்றிருக்கும்?5
1) பி.ஐ.எஸ். முத்திரை2) தங்கத்தின் சுத்தத் தன்மை3) எந்த நிறுவனம் (அ) எந்த பகுதியில் அந்த நகைக்கு தரச்சான்று வழங்கியுள்ளது4) நகையை விற்கும் கடையின் பெயர்5) எந்த ஆண்டு தரச்சான்று பெற்றது
505.தங்கத்தில் பயன்படுத்தப்படும் 916 எதைக் குறிக்கிறது?தங்கத்தின் சுத்தத் தன்மை நூற்றுக்கு 91.6 சதவீதம் சுத்தமானது
506.பி.ஐ.எஸ் முத்திரைக்கு அருகில் 958, 916, 875, 750, 585, 375 என குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த நகையின் கேரட் எவ்வளவு?முறையே 23, 22, 21, 18, 14, 9
507.ஒரு தங்க நகை எந்த ஆண்டு பி.ஐ.எஸ் தரச்சான்று பெற்றது என்பதைக் குறிக்கும் வகையில் எவ்வாறு சில எழுத்துக்கள் இடம் பெற்றிருக்கும்?2000-A ,2001-B ,2002-C ...
508.இ.பி.எப் என்றால் என்ன?தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி
509.வி.பி.எப் என்றால் என்ன?வாலண்டரி புராவிடெண்ட் பண்ட்
510.டி.ஏ. என்றால் என்ன?அகவிலைப்படி
511.கும்பகோணம் நகரத்தின் நடுநாயகமாக அமைந்துள்ள கோயிலின் பெயர்?உச்சிப் பிள்ளையார் கோயில்
512.ஆஸ்கர் விருது எந்தத் துறைக்கு வழங்கப்படுகிறது?சினிமா
513.புரிட்ஸ்கர் விருது எந்தத் துறைக்கு வழங்கப்படுகிறது?கட்டடக் கலை
514.இந்தியாவில் நடந்த முதல் கிராண்ட்பிரிக்ஸ் கார் பந்தயத்தின் சாம்பியன் யார்?செபஸ்டியான் வெட்டால்
515.காமன்வெல்த் தலைமை செயலாளராக இரண்டாம் முறையாக நியமிக்கப்பட்டவர் யார்?கமலேஷ் சர்மா
516.”தி டி.சி.எஸ். ஸ்டோரி... அண்ட் பியாண்ட்” என்ற நூலை எழுதியவர் யார்?எஸ். ராமதுரை
517.தேசிய வளர்ச்சி கவுன்சில் தலைவர் யார்?பிரதமர்
518.வெண்மைப் புரட்சியின் தந்தை என வருணிக்கப்படுபவர் யார்?வர்கீஸ் குரியன்
519.ஹாக்கி விளையாட்டில் பயன்படுத்தப்படும் வார்த்தை எது?1)டியூஸ்2)எல்.பி.டபிள்யூ 3)பெனால்டி கார்னர் 4)நோ பால்பெனால்டி கார்னர்

520.கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டம் எது?எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ்

===============================================
சுட்டீஸ், நாங்கள் தொகுத்து வழங்கிய பதிவுகளில் உள்ள குறை நிறைகளை வாசகர்கள், அன்பான முறையில் எங்களுக்கு எடுத்துக்கூறி, எங்களது பதிவுகள் மேலும் சிறப்படைய வாழ்த்தி உற்சாகப்படுத்துமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு   
வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் தமிழ் ரோஜாக்கள். 


No comments:

Post a Comment